India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குனர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் அனில்மேஷ்ராம், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் உடனிருந்தார்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நான்கு புதிய பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து சென்னை, மேட்டுப்பாளையம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வகையில் 4 புதிய புறநகர பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள பல்வேறு பெண்களின் பாலினத்தை சட்ட விரோதமாக கண்டறிவதற்காக, சட்ட விரோத கும்பல் பெண்கள் அனைவரையும் தர்மபுரியிலிருந்து பெரம்பலூருக்கு கொண்டு சென்றனர். அங்கு கருவின் பாலினத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கினர். தகவல் அறிந்த தர்மபுரி சுகாதாரத்துறை இணை இயக்குநர் சாந்தி தலைமையில் அதிகாரிகள் மர்மகும்பலை பெரம்பலூர் அருகே சுற்றி வளைத்து பிடித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வயலில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு தோட்டக்கலைத் துறை மூலம் விண்ணப்பித்து மானியத்தை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா, சிறு குறு சான்று, அடங்கல், வரைபடம் நீர் மற்றும் மண் பரிசோதனை சான்று சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலக மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பெரம்பலூா் அடுத்த விளாமுத்தூரைச் சோ்ந்தவா் துரைராஜ். இவரது 2.32 ஏக்கா் தரிசு நிலத்தை இவர் மற்றும் அவரது சகோதரா் மணி ஆகியோா் பிரித்து கொண்டனா். இதில் அவரின் சகோதரருக்கு கூடுதலாக இடம் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடா்பாக துரைராஜ் வட்டாட்சியா் மீது மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த ஆணையம் தற்போதைய வட்டாட்சியருக்கு பிடி ஆணை வழங்கி நேற்று உத்தரவிட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் காவல் நிலையம் மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் விருது வழங்கினார். இந்த விருதினை பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கருணாகரன் தமிழ்நாடு காவல்துறை இயக்குனரிடம் இருந்து இன்று பெற்றுக் கொண்டார். சிறந்த காவல் நிலையத்திற்கு பெரம்பலூர் காவல் நிலைய காவல்துறையினரை எஸ்பி பாராட்டினார்.
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பாடி, மேலப்புலியூர், லாடபுரம், அம்மாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சி தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 26 அன்று காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். எனவே விவசாயிகள் அன்றைய தினம் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு, பெரம்பலூரில் கோவிட் நோய்த் தொற்று காரணமாக பெற்றோரை இழந்த 1,431 குழந்தைகளுக்கு வட்சால்யா மிஷன் திட்டத்தின் மூலம் உதவ வேண்டி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி அவர்களை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.
பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை துறையின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு செய்யும் விதமாக கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி கைகாட்டி எதிரே உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 6 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் 18 வயது முடிந்த 5ஆம் வகுப்பு படித்த இளைஞர்கள் அனைவரும் ஜூலை30ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.