India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டம், பொன்னாங்குடி கண்டராபாணிக்கம் நாட்டு புனித சவேரியார் ஆடி மாத சப்பர தேர் பவனி விழாவை முன்னிட்டு இன்று பொன்னாங்குடியில் சிவகங்கை மாவட்ட சைக்கிள் அசோசியேஷன் சார்பில் மாபெரும் சைக்கிள் மற்றும் மாரத்தான் பந்தயம் நடைபெற்றது. மாரத்தான் பந்தயத்தில் பெரம்பலூர் வட்டம் மேலப்புலியூர் மாற்றுதிறனாளிகள் வீரர் எஸ்.கலைச்செல்வன் பங்கேற்று 4 ஆம் இடம் பிடித்துள்ளார் .
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள், நாய்களால் கால்நடைகள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், ஏரி மதகுகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் மற்றும் பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு விரைவில் நிவாரண இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஒன்றிய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சர்
சிராக் பாஸ்வானை நேரில் சந்தித்தார். பெரம்பலூர் மாவட்ட விவசாய பெருமக்கள் பெருமளவு உற்பத்தி செய்யும்
சின்னவெங்காயத்தின் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலை மேம்படுத்த, பெரம்பலூர் மாவட்டத்தில் சேமிப்பு கிடங்குகளை நிறுவுவதற்கு பெரம்பலூர் தொகுதி எம். பி அருண்நேரு நேற்று (ஜூலை -26)கோரிக்கை வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த வள்ளி என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சொத்திற்காக தனது தாய் மற்றும் சகோதரியை கொலை செய்தார். இந்நிலையில் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளியான வள்ளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தண்டனை வழங்கி இன்று பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெருந்திரளாக விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குரும்பலூர் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்ககோரி ஐந்து நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து மாணவர்களும், அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் களம் இறங்கினர். இன்று தற்சமயம் கல்லூரி முதல்வர் அறைக்குள் அனைத்து கௌரவ விரிவுரையாளர்களும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் அடுத்த வடக்குமாதவி ஊராட்சியில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை தாயாரும், ஒன்றிய பெருந்தலைவர் மீனா அண்ணாதுரை மாமியார் அண்மையில் மறைந்ததையடுத்து, நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அவர்களின் இல்லம் சென்று மறைந்த நபரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் இன்று நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீா்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். எனவே விவசாயிகள் தங்களது குறைகளை மனுவாக கொடுத்து பயன்பெற வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளாா்.
சிறுவாச்சூரில் உள்ள நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்திவாசிய பொருட்கள் இருப்பு நிலை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து குறித்த காலத்தில் பொருட்களை குடும்ப அட்டைதார்களுக்கு தடையின்றி வழங்கிட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து கோயம்புத்தூர், சென்னை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையிலான நான்கு புதிய பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் இன்று, தொடங்கி வைத்ததோடு நில்லாமல் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களோடு இணைந்து பேருந்தில் பயணம் செய்தனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.