Perambalur

News July 18, 2024

மாணவர் சேர்க்கை ஜூலை.31 வரை நீட்டிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்,ஆலத்தூர்,குன்னம் பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 2024- 25 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை ஜூலை.15 இல் முடிந்த நிலையில் தற்போது ஜூலை.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் – 9443852306, 6379764520, ஆலத்தூர் – 9499055883, குன்னம் – 9894697154 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 17, 2024

பெரம்பலூர்: மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 17, 2024

பெரம்பலூர் கலெக்டர் இடமாற்றம்; மக்கள் அதிருப்தி

image

பெரம்பலூர் கலெக்டராக கற்பகம் கடந்த ஆண்டு பிப். மாதம் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அரசின் நலத்திட்டங்களை அமல்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டதுடன், பொது மக்கள் எளிதாக அணுக கூடிய வகையில் பணியாற்றி அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வும் கண்டு கொடுத்தார். இந்நிலையில் ஆட்சியர் கற்பகம் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து அம்மாவட்ட மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

News July 17, 2024

ஐடிஐ சேர்க்கை தொடர்பு எண்கள் வெளியீடு

image

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை குறித்த விவரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ, ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 9499055883/9499055884 எண்களிலும், பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 9443852306, 9047949366, 6379764520 எண்களிலும் குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 9894697154 எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மிக சுற்றுலா

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். பெரம்பலூரை சேர்ந்த 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஜூலை 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இம் முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க. கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 17, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஜூலை 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இம் முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க. கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

தொழிற்பயிற்சி படிப்பில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-2025 ஆம் ஆண்டு பயிற்சியாளர் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கான நேரடி சேர்க்கை ஜூலை-15ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில், தற்போது ஜூலை-31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுபோல பயிற்சியாளர் நேரடி சேர்க்கைக்கான கடைசி நாள் ஜூலை 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

காவலர்களுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி

image

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல் மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி இன்று (ஜூலை-16) பெரம்பலூர் நாரணமங்கலத்தில் உள்ள காவல்துறை துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இதில் 11 காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!