Perambalur

News September 8, 2025

பெரம்பலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரம்பலூர் மக்களே இதற்கு விண்ணபிக்க <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News September 8, 2025

பெரம்பலூர்: நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

பெரம்பலூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட, மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 9.9.2025 நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது . இந்த கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள் , குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என
பெரம்பலூர் மின்கோட்ட செயற்பொறியாளர் அசோக் குமார் தகவல்.

News September 8, 2025

பெரம்பலூர்: தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை!

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, (Assistant Manager) மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே Online-யில் இங்கே <>கிளிக் <<>>செய்து 21.09.2025 தேதிக்குள் Register பண்ணுங்க! இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 8, 2025

பெரம்பலூர்: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல் !

image

பெரம்பலூர் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்களுக்கு காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 8, 2025

பணமோசடி செய்த நபரை கைது செய்த போலீசார்

image

பெரம்பலூரில் உள்ள SBI லைஃப் இன்சூரன்ஸில் அட்வைசராக பணிபுரியும் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவர் தனது நண்பரான செந்தில்குமார் (45) என்பவர் ஒரு அறக்கட்டளைத் திட்டத்தைத் தொடங்கப் போவதாகவும், அதில் அதிக லாபம் ஈட்டுவதாகவும் என ஆசை வார்த்தை கூறி ரூ.88,28,900 பணத்தை ஏமாற்றியதாக மாவட்ட குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் செந்தில்குமாரை கைது செய்தனர்.

News September 8, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று, நாளை Power Cut !

image

பெரம்பலூர் மக்களே நமது மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ⏩செந்துறை, ⏩நடுவலூர், ⏩தேளூர், ⏩கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆபீஸ், ஆகிய பகுதிகளில் இன்று 08.09.2025 மின்தடை அறிவிக்கட்டுள்ளது. நாளை 09.09.2025 ஆம் தேதி ⏩தூத்தூர், ⏩திருமானுர், ⏩திருமழப்பாடி, ⏩கீழப்பலூர் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 8, 2025

பெரம்பலூர் ஆசிரியர்களுக்கு விருது

image

முத்தமிழ் கலைகளின் இலக்கிய சங்கமம் மற்றும் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் கல்வித் தென்றல் விருது வழங்கும் நிகழ்வு இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் பணி புரியும் ஆசிரியர்கள் கார்த்திகேயன், மாயகிருஷ்ணன், கோபால் ஆகியோர் தலைமை ஆசிரியராகவும் ராஜமாணிக்கம், ராஜா, துரை ஆகியோர் பட்டதாரி ஆசிரியராகவும் ஜோதிவேல் ஆகியோருக்கு சிறந்த ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டது.

News September 8, 2025

பெரம்பலூர்: தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் பாராட்டு

image

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில்10 & 12-ம் வகுப்புகளில் 100% தேர்ச்சி வழங்கிய தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில் அமைச்சர் நேரு சிறப்புரை ஆற்றினார். கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

News September 7, 2025

பெரம்பலூர்: பெல் நிறுவனத்தில் சேர வாய்ப்பு

image

திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 760 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ, ITI, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து செப்.,15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 7, 2025

பெரம்பலூர்: LIC நிறுவனத்தில் வேலை- கடைசி வாய்ப்பு

image

பெரம்பலூர் மக்களே..! காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளை (செப்.,8) கடைசி நாளாகும். அனைவருக்கும் இத்தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!