India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் காவல் நிலையம் மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் விருது வழங்கினார். இந்த விருதினை பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கருணாகரன் தமிழ்நாடு காவல்துறை இயக்குனரிடம் இருந்து இன்று பெற்றுக் கொண்டார். சிறந்த காவல் நிலையத்திற்கு பெரம்பலூர் காவல் நிலைய காவல்துறையினரை எஸ்பி பாராட்டினார்.
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பாடி, மேலப்புலியூர், லாடபுரம், அம்மாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சி தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 26 அன்று காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். எனவே விவசாயிகள் அன்றைய தினம் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு, பெரம்பலூரில் கோவிட் நோய்த் தொற்று காரணமாக பெற்றோரை இழந்த 1,431 குழந்தைகளுக்கு வட்சால்யா மிஷன் திட்டத்தின் மூலம் உதவ வேண்டி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி அவர்களை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.
பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை துறையின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு செய்யும் விதமாக கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி கைகாட்டி எதிரே உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 6 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் 18 வயது முடிந்த 5ஆம் வகுப்பு படித்த இளைஞர்கள் அனைவரும் ஜூலை30ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் நேற்று மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் ஊறல் போடுதல் தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் கள்ளச்சாராய ஊறல் எங்காவது பதுக்கப்பட்டுள்ளதா, மேலும் விற்பனை செய்யப்படுகிறதா என்று மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தனசேகரன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயம், தக்காளி, வாழை, மரவள்ளி, மஞ்சள் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அழைப்பு விடுத்துள்ளார். இதில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் அனைவரும் அருகிலுள்ள வேளாண் நிலையத்தில் ஏக்கருக்கு பிரீமியம் தொகை ரூ.225 முதல் ரூ.3460 வரை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் “முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” செயல்படுத்தும் விதம் குறித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து பள்ளி மாணவர்களிடம் உரையாடினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மத்திய அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டதில் சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கான சலுகைகள், புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்றவை மத்திய அரசு பட்ஜெட்டில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பட்ஜெட்டில் இடம் பெறுபவை குறித்து உங்கள் கருத்து?
Sorry, no posts matched your criteria.