Perambalur

News August 6, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் 65 மி.மீ. மழை பதிவு

image

பெரம்பலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அதன்படி பெரம்பலூர் 6 மி.மீ, தழுவாழை 37 மி.மீ, பாடாலூர் 7 மி.மீ, செட்டிகுளம் 15 மி.மீ. மழையும் பெய்துள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 65 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 5.91 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2024

பெரம்பலூரில் 1,06,434 பேர் பயன்

image

தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்து, 4ஆம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,06,434 மக்கள் இந்த திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

News August 5, 2024

ஆட்சியர் காலில் விழுந்து கண்ணீர் மல்க மாற்றுத்திறனாளி மனு

image

காரை கிராமத்தைச் சார்ந்த மாரிமுத்து என்பவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கண்ணீர் மல்க வேலை வேண்டி மனு அளித்தார். பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புக்காக நேர்காணல் வரை சென்றும் என் நிலைமையை பார்த்து யாரும் வேலை தரவில்லை எனக்கு துப்புரவு பணியாளர் வேலையாவது நீங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்தார்.

News August 5, 2024

முதன்மைக் கல்வி அலுவலருக்கு வாழ்த்து

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலராகப் பணியாற்றி தற்போது பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்று இருக்கும் முதன்மை கல்வி அலுவலர் சு.சுகானந்தம் அவர்களை 5-8-2024 அன்று மாலை சந்தித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.உடன் லாடபுரம் ஆதி திராவிடர் நல உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மாயகிருஷ்ணன் பங்கேற்றார்.

News August 5, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து, வரும் 05.08.2024 முதல் தொடங்கி 21 நாட்களுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போர்கள் அனைத்து தங்களது பசு மற்றும் எருமைகளுக்கு தவறாமல் இத்தடுப்பூசியினை போட்டுக்கொண்டு,இக்கொடிய நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளும் படி மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் பெரம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

News August 5, 2024

பெரம்பலூர் சிறுவாச்சூர் அருகே கோர விபத்து

image

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அடுத்த மலையப்ப நகர் அருகே இன்று அதிகாலை 4 மணி அளவில் முன்னே சென்ற டேங்கர் தண்ணீர் லாரி மீது சென்னையிலிருந்து நாட்டரசன் கோட்டைக்கு சென்ற தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 5, 2024

பெரம்பலூர் ஆட்சியர் 10-நிமிடத்தில் செய்த செயல் 

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்த பத்தே நிமிடத்தில், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அய்யர்பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்ற M.Com பட்டதாரி மாற்றுத்திறனாளி நபருக்கு மூன்று சக்கர வண்டியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.

News August 5, 2024

பெரம்பலூரில் குறவர்இன மக்கள் ஆட்சியரிடம் மனு 

image

பெரம்பலூர் நகர பகுதியில் உள்ள புதிய மதன கோபாலபுரம் பகுதியில் மலைக்குறவன் இன மக்கள் வசித்து வருகின்றனர். சாலை விரிவாக்கம் பணி மேற்கொள்ளும் போது தங்களது இன மக்களுக்கு புதிய இடம் எளம்பலூர், காந்தி நகரில் ஒதுக்கப்பட்டது. எங்களுக்கு கலைஞர் கனவு திட்டம் மூலம் வீடு ஒதுக்கீடு  செய்யுமாறு இன்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்விடம் பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

News August 5, 2024

பெரம்பலூரில் “மக்களைத்தேடி மருத்துவம்” 4-ஆண்டு துவக்கவிழா

image

பெரம்பலூர் மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை சார்பாக மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் 4-ஆம் ஆண்டு துவக்கவிழா இன்று (05.08.2024) பெரம்பலூர் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இணை இயக்குநர் மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் பிரதாப்குமார்,மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!