Perambalur

News September 9, 2025

பெரம்பலூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

பெரம்பலூர் மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதல் ,டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதல், எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசு மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் 9498794987 என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்க முடியும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 9, 2025

பெரம்பலூர்: Canara வங்கியில் வேலை! Apply பண்ணுங்க !

image

பெரம்பலூர் இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா Bank-யில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் Bank வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் இங்கே <>க்ளிக் <<>>செய்து Register பண்ணுங்க! மாதம் ரூ.22,000 முதல் வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 30 வயதியிக்குள் இருக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 9, 2025

பெரம்பலூர் மக்களுக்கு Good News சொன்ன கலெக்டர்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில், விவசாயிகள் வேளாண் உட்கட்டமைப்பு பணிகளுக்கு வட்டி மானியத்துடன் கடன் பெறலாம். agriinfra. dac.gov.in என்ற இணையதள முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கி கிளைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9842011079, 9965737555 என்ற எண்ணை அழைக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தகவல் தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 9, 2025

பெரம்பலூர் கலெக்டர் கொடுத்த அப்டேட்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1- 2025 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதால் தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். இப்பயிற்சியில் சேர்ந்து பயில www.tahdco.com இணையத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04328 276317 எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 9, 2025

மாவட்ட அளவிலான போட்டிகளை தொடங்கி வைத்த கலெக்டர்

image

பெரம்பலூர் எம்.ஜி.ஆர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடனருந்தனர்.

News September 8, 2025

தவெக தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிப்பு

image

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வரும் செப்.,13ஆம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் சிவகுமார் பெரம்பலூர் தொகுதி மற்றும் குன்னம் தொகுதிக்கு பொறுப்பாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News September 8, 2025

பெரம்பலூர்: இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி, எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் www.tahdco.com-இல் விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய 04328 276317 என்ற எண்ணில் அழைக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE NOW.

News September 8, 2025

மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 287 மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே கலெக்டர் சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 287 மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

News September 8, 2025

பெரம்பலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரம்பலூர் மக்களே இதற்கு விண்ணபிக்க <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News September 8, 2025

பெரம்பலூர்: நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

பெரம்பலூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட, மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 9.9.2025 நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது . இந்த கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள் , குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என
பெரம்பலூர் மின்கோட்ட செயற்பொறியாளர் அசோக் குமார் தகவல்.

error: Content is protected !!