India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (ஏப்.10) ஒருநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளார். இதில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் உலர்தினமாக இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு தொலைபேசி எண்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04328 225 700, காவல் கட்டுப்பாட்டு அறை – 100, குழந்தைகள் உதவி மையம் – 1098, பாலியல் வன்கொடுமை – 181, டெங்கு காய்ச்சல் தடுப்பு பிரிவு – 1077,பொது விநியோக திட்டம் – 1967
பெரம்பலூர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் 10.4.2025 முதல் 15.4.2025 வரை நேரில் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர்வட்டார இயக்க மேலாளரிடம் 6383774958 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியா உள்ள ரீடைல் சேல்ஸ் அசோசியேட் (Retail Sales Associate) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகைகள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதி 15ன் படி தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். அப்படி தமிழில் பெயர்ப் பலகை வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது உறிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார். கடைகள் வைத்துள்ள உங்க நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க
கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான அருண் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் அவரது மகன் அருண் நேருவுக்கு சொந்தமான நிறுவனம், அவரது வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பெரம்பலூர்,சிறுவாச்சூர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவில். இங்கு நினைத்ததை வேண்டி அம்மனுக்கு மாவிளக்கு ஏத்தி, அபிஷேகம் செய்தால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். சித்திரைபவுர்ணமி, கார்த்திகைதீபம் போன்றவை இங்கு மிக சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. இங்கு வந்து வேண்டினால் கல்யாண பிரச்சினை, குழந்தை பிரச்சனை,குடும்ப பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25.04.2025 அன்று, பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் பங்குபெறும் இம்முகாமில், 10ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்கள்)
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளளவர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 25 அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.