India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சேலம் வர உள்ள நிலையில், விமான நிலையத்தில் வந்துச் செல்லும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். ஹெலிகாப்டரில் வரும் பிரதமர், சேலம் விமான நிலையம் வந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குமரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்மந்தப்பட்ட தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிர்ந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என குமரி எஸ்பி தெரிவித்துள்ளார். இதற்காக, எஸ்பி அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கிவரும் மொபைல் எண்ணை(70103 63173) தொடர்புகொள்ளலாம் என எஸ்பி சுந்தரவதனம் அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்டத்திலேயே 2 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் தனித்துவம் பெற்றுள்ளது. 38 ஊராட்சிகளை உள்ளடக்கிய திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகவும், 6 ஊராட்சிகள் மதுரை நாடாளுமன்ற தொகுதியிலும் உள்ளது. ஒரே ஊராட்சி ஒன்றிய மக்கள் இரு எம்பி-க்களை தேர்வு செய்ய உள்ளனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இவர்,தற்போது தென் சென்னை, புதுச்சேரி, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019 தேர்தலில் இவர் தூத்துக்குடியில் போட்டியிட்ட நிலையில் மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிடுவாரா?
புதுச்சேரி, தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் தனது விலகல் குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி, தென்சென்னை அல்லது நெல்லை, குமரி ஆகிய தொகுதிகளில் ஒன்றில பாஜக சார்பில் தமிழிசை போட்டியிட வாய்ப்புள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் இவர் தூத்துக்குடியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர், தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். விலகல் குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். இவர் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு கனிமொழியிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி, தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். விலகல் குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். இந்நிலையில் தென் சென்னை, புதுச்சேரி, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் இவர் தூத்துக்குடியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்த தனது ராஜினாமாக கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இவர் புதுச்சேரியில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் புறப்பட்டு கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடியிலிருந்து மதுரை வழியாக மேட்டுப்பாளையத்திற்கும், ராமேஸ்வரம் முதல் மங்களூர் வரை மதுரை வழியாக ரயில் இயக்குவதற்கான ஒப்புதல் அளித்து விரைவில் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இன்று தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.