India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அவனியாபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் முனியசாமி 55.இவர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சை பெற்றும் சரி ஆகாததால் மன உளைச்சலில் இருந்து வந்த முனியசாமி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் சேர்ந்தவர் ரங்கநாதன்(63). குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து இந்த நிலையில் நேற்று (மார்ச்.19) வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படிக்கும் 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் உள்பட பல்வேறு வகையில் பாலியல் தொல்லை கொடுத்த பள்ளியின் ஆசிரியர்கள் மீதும், ஆசிரியர்களின் பாலியல் வன்முறையை மறைக்க முயற்சித்து, குழந்தையின் பெற்றோர்களை மிரட்டிய பள்ளியின் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் இன்று அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மனு வழங்கினர்.
சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுக கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சந்திரகாசன் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ராஜவீதியில் உள்ள தனியார் கணினி மையத்தில் இன்று காலை முதல் பெண்கள் குவிந்தனர். சுயமாக கைத்தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.10,0,000 வரை வட்டி இல்லாத கடன் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கடன் தொகையை பெறும் பொருட்டு இணையதளத்தில் பதிவு செய்வதற்காக கணினி மையத்தில் பெண்கள் குவிந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடி அவர்கள் இன்று (20.03.2024) பாராளுமன்ற தேர்தலுக்கு பொதுக்கூட்டம், ஒலிபெருக்கி அனுமதி, தேர்தல் பிரச்சார வாகன அனுமதி, தேர்தல் பிரச்சார பேரணி போன்றவற்றுக்கான அனுமதி பெற SUVIDHA portal என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற 22 மற்றும் 26-ந்தேதிகளில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி 2 நாட்களும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை என சென்னை மாநகர போக்குவரத்து போலிசார் தெரிவித்துள்ளனர்.
வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு கடலூர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்குக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த கூட்டாக அறிவித்தனர். இதனையடுத்து விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிட உள்ளனர். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.
வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு திருவள்ளூர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்குக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கூட்டாக அறிவித்தனர். இதனையடுத்து திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிட உள்ளனர். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.
வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு தஞ்சாவூர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்குக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கூட்டாக அறிவித்தனர். இதனையடுத்து தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிட உள்ளனர். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.