Tamilnadu

News August 27, 2025

தர்மபுரி: விநாயகர் சதுர்த்திக்கு இதை பண்ணுங்க

image

விநாயகர் சதுர்த்தி நாளில் வீட்டில் பிள்ளையார் வைத்து, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள், சுண்டல், மோதகம், கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைத்து வழிபடலாம் (அ) அல்லது தர்மபுரி சாலை விநாயகர் கோயிலுக்கு சென்று வரலாம். வழிபடுவதற்கான நேரம் : காலை 07.45 மணி முதல் காலை 08.45 மணி, 10.40 மணி முதல் பகல் 01.10 மணி, மாலை 05.10 மணி முதல் இரவு 07.40 மணி. SHARE IT

News August 27, 2025

தி.மலை: உடல் வலி நீங்க இந்த கோயில் போங்க

image

தி.மலை கிரிவல பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயில் எப்போதுமே ஸ்பெஷல். வழக்கமாக தொந்தியுடன் இருக்கும் விநாயகர் இங்கு நந்தியுடன் இருக்கிறார். பிள்ளையார் கோயில் என்றாலும் இங்கே விநாயகர் சிலை இருக்காது. மூன்று வாசல்களை கொண்ட சிறிய குகை மட்டுமே உள்ளது. இந்த குகை வழியே தவழ்ந்து சென்று வெளியே வந்தால், உடல் வலிகள் நீங்கி ஆரோக்கியம் பெறலாம். விநாயகர் சதுர்த்தி நாளில் மிஸ் பண்ணாம போயிட்டு வாங்க. SHARE IT

News August 27, 2025

திருப்பூரில் மின் தடை அறிவிப்பு!

image

திருப்பூர்: அருள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதிபாளையம், சேடர்பாளையம் ரோடு, உப்பிலிபாளையம், அண்ணாநகர், செட்டிதோட்டம், ஓம்சக்தி நகர், அய்யம்பாளையம், நொச்சிபாளையம், சென்னிமலைபாளையம், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், பல்லடம் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9:00 – 4:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

ராம்நாடு: அரசு பரிசுத்தொகை ரெடி! மரம் வளர்க்க ரெடியா?

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சார்பில் ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஆர்வமுள்ள நபர்கள் (அ) அறக்கட்டளைகள் 2 1/2 ஆண்டுகளுக்கு அரசு நிலத்தில் மரம் நடுதலை மேற்கொண்டு பராமரிக்க வேண்டும். இவ்வாறு மரம் வளர்த்தால் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வெகுமதி (பரிசுத்தொகை) அளிக்கப்படும். மாநில விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்படும். தொடர்புக்கு – 7708633668. நம்ம ஊரை பசுமையாக்க எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News August 27, 2025

கரூர்: 19 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி

image

கரூர்: லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் 48. இவரது மகள் லோகப்பிரியா (19) நர்சிங் முடித்து லாலாபேட்டை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் காணவில்லை. இதுகுறித்த போலீசார் விசாரணையில் மேல தாலியாம்பட்டியைச் சேர்ந்த திருமணமான ரங்கநாதன் என்பவர் ஏமாற்றி கூட்டிச் சென்றுள்ளார் எனத் தெரிய வந்தது.

News August 27, 2025

திருப்பத்தூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் வருகிற ஆகஸ்ட் 29ம் தேதியன்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த கூட்டமானது நிர்வாகக் காரணங்களுக்காக ஆகஸ்ட் 28ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் த.சிவசெளந்திரவல்லி தெரிவித்துள்ளார்‌. இந்த தகவலை விவசாயிகளுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News August 27, 2025

ராணிப்பேட்டை: மறக்காம.. இத பண்ணுங்க

image

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை சோளிங்கரில் உள்ள கமல விநாயகர் கோயிலில் இன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் பூஜை செய்தால் துன்பங்கள், தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ( விநாயகர் அருள் பெற SHARE பண்ணுங்க)

News August 27, 2025

விருதுநகர் மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

image

விருதுநகர் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து அதில் Form 6ஐ கிளிக் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பெயர் சேர்த்தல் நீக்கம், மாற்றம் செய்ய Form 7 (அ) 8ஐ கிளிக் செய்ய வேண்டும். வெளிநாட்டு வாழ் மக்களும் Form 6Aவை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் நெருங்கும் வேளையில் எல்லோரும் வாக்களிக்க உடனே SHARE பண்ணுங்க.

News August 27, 2025

நாமக்கல்: கம்மி விலையில் பஸ் டிக்கெட்! CLICK NOW

image

நாமக்கல் மக்களே.., இன்று(ஆக.27) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் வந்துள்ளீர்களா..? திரும்ப செல்ல ரிட்டர்ன் டிக்கெட் போட்டாச்சா..? கவலை வேண்டாம்! தமிழக அரசின் சிறப்பு பஸ்களில் மலிவு விலையிலேயே புக் செய்யலாம். அதற்கு <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 27, 2025

திண்டுக்கல்: 108 நன்மை தரும் விநாயகர்!

image

திண்டுக்கல் மக்களே…, இன்று(ஆக.27) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டில் விநாயகர் வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில், கோபாலசமுத்திரக் கரையில் அமைந்துள்ள 108 விநாயகர் கோயிலில் இன்று திருவிழா கொண்டாடப்படுகிறது. பால்குடம், நேர்த்திக் கடன் செலுத்துதல் எனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். 108 விநாயகரும் 108 நன்மைகளைத் தரக்கூடியவர்களாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!