India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் கண்காணிப்பு பணியில் பொதுமக்களும் பங்கு பெறலாம் ஓட்டுக்கு பணம் தருதல், சட்டவிரோத போஸ்டர் ஒட்டுதல் போன்ற அனைத்து விதமான தேர்தல் விதிமீறல் புகார்களை, நேரடியாக தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான புகைப்பட, வீடியோ ஆதாரங்களை “சி விஜில்” ( https://play.google.com/store/apps/details?id=in.nic.eci.cvigil ) என்ற செயலியில் அனுப்பலாம் எல்லாம் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி பகுதியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தொடர்ந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த ஆதிகேசவன் மற்றும் கவியரசன் ஆகிய இருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் புதிய கலெக்டர் அலுவலகத்தில் நாளை தொடங்கி 27ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு இடைவெளியின்றி வேட்புமனு பெறப்படுகிறது. 23ஆம் தேதி, 24ஆம் தேதி விடுமுறை நாட்களில் வேட்புமனு பெறப்படாது. இந்நிலையில், வேட்புமனு பெறும் ஏற்பாடுகளை தேர்தல் துறை தீவிரமாக செய்து வருகிறது.
கும்பகோணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் வேலை செய்து வந்த கோகிலா (50) என்ற பெண், அப்பள்ளியில் பயிலும் 5 வயது மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக பெற்றோர் அளித்த புகாரி., அப்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 8ம் தேதி காலை 9:00க்கு மேல் 9:45 மணிக்குள் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் கொட்டகை முகூர்த்த விழா, ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மதியம் 2:00 மணிக்கு மேல் 3:00 மணிக்குள் வண்டியூர் வைகையாறு தேனுார் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை ஆற்றுப் பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு தென்கரை பாசன வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மன்னார்குடி வ.உ.சி சாலையில் உள்ள இராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா அறைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சாரு ஸ்ரீ இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.
நீலகிரி, உதகையில் இன்று (மார்ச் 19) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள புகழ் பெற்ற 2 சர்வதேச பள்ளிகளுக்கு மின் அஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் 3 வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா தலைமையில்
பாராளுமன்ற தேர்தல் 24 முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமும் மற்றும் பேருந்து பயணிகளிடம் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை பெரம்பலூர் துறை மங்கலம் பகுதியில் பெரம்பலூர் நகர செயலாளரும், எம்.எல்.ஏவுமான பிரபாகரன் தலைமையில் திமுக சார்பில் தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து நல்ல காலம் பொறக்கிறது ஜக்கம்மா சொல்கிறார் திமுகவிற்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்தனர்.
Sorry, no posts matched your criteria.