Tamilnadu

News March 19, 2024

கள்ளக்குறிச்சி: நாளை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை முதல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன்குமாரிடம் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2024

நாகையில் பெண் ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

image

நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதன் பேரில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக வெளிப்பாளையம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர் கள்ளச்சாராய கடத்தல் மற்றும் விற்பனை குற்றத்தில் ஈடுபட்ட தேன்மொழி கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

News March 19, 2024

ஈரோட்டில் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

image

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்குகிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய 2 இடங்களில் நடக்கிறது. பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

News March 19, 2024

புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமம்

image

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். புதுச்சேரி மக்கள் என் மீது அன்பை பொழிந்தனர். அந்த அன்பு எப்போதும் தொடரும், ஆனால் புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாகத்தான் இருக்கின்றது, மாளிகை வாழ்க்கையை விட்டு மக்கள் பணிக்கு செல்கின்றேன் ஆகவே நாளை தமிழக பாஜக அலுவலகம் செல்கின்றேன் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வேன் என்றார்.

News March 19, 2024

தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்

image

ஆரணி நாடாளுமன்ற தொகுதி
ஆரணி திமுக கட்சியின் சட்டமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆரணி தொகுதி பொறுப்பாளர் அன்பழகன் அவர்களின் தலைமையில் ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் தட்சிணாமூர்த்தி, ஜெயராணி ரவி, ஆரணி நகர மன்ற தலைவர் துரைமாமது மற்றும் கழக நிர்வாகிகள், பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News March 19, 2024

திண்டுக்கல்: நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

image

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக இன்று 19.03.2024- வழக்கறிஞர் சங்க துணை தலைவர் குமரேசன் அவர்கள் தலைமையில், செயலாளர் உதயகுமார் அவர்கள் முன்னிலையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து உறுப்பினர்களின் கருத்தை கேட்ட பின்பு நாளை 20.03.2024- நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News March 19, 2024

மனு அளிக்க மாற்று ஏற்பாடு செய்த கோவை மாநகராட்சி 

image

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.19) பொதுமக்கள் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் மனுக்களை போட்டு செல்லலாம். பின்னர் அந்த மனுக்கள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வர் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 19, 2024

பாராளுமன்ற தேர்தல் குறித்து பாஜக ஆலோசனை கூட்டம்

image

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி மாநில பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரின் தலைமையில் இன்று பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் செல்வ கணபதி, பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

News March 19, 2024

டெல்லியில் விருது பெற்ற மதுரை போக்குவரத்து கழகம்

image

சாலைப் போக்குவரத்து நிறுவனம், டெல்லி மூலம் 2022-2023 ஆம் ஆண்டிற்கான எரிபொருள் திறன் மற்றும் 5 ரன்னர் அப் விருதுகளையும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரைக்கு வழங்கப்பட்டது. தமிழக போக்குவரத்து கழக மதுரை கோட்ட நிர்வாக இயக்குநர் ஆறுமுகம் டெல்லியில் சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் சாலைப்போக்குவரத்து & தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகச் செயலாளர் அனுராக் ஜெயினிடமிருந்து விருதினை பெற்றார்.

News March 19, 2024

சேலம் வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் 

image

மார்ச் 23, 30 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து கொச்சுவேலிக்கும், மார்ச் 24, 31 ஆகிய தேதிகளில் கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!