India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டம் அரூர் கடைவீதியை சேர்ந்தவர் மோகன்குமார்(64). ஓய்வுபெற்ற துணை தாசில்தார். இவர் நேற்று சொந்த வேலை காரணமாக டூவீலரில் கருங்கல்பாடிக்கு சென்றுவிட்டு கூத்தாடிப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த வளைவில் தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மோகன்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-4 மற்றும் தொகுதி-2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற வெள்ளிக்கிழமை (மார்ச்.22) முதல் தொடங்கவுள்ளது.போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டிக் கடை, அடகு கடைகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்னா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டிக் கடை, அடகு கடை, அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை நெறி விதிகளுக்கு மாறாகவோ , சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என கூறினார்
தேனி – மதுரை சாலையில் கருவேல்நாயக்கன்பட்டி அருகே நேற்று (மார்.18) பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண்டிபட்டியை சேர்ந்த பெருமாள் அவ்வழியே டூவீலரில் தேனிக்கு சென்றார். அவரிடம் பறக்கும் படையினர் சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூ.5.77 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாலையில் வெட்டாறு பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜு பாண்டி தலைமையில் காவலர்கள் எட்வின் பிரபு, காளிதாசன் குழுவினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரளம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரெஜி என்பருடைய காரில் ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,13,800 பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடலில் குளிக்க சென்ற சிக்கல் பொராவாசேரியை சேர்ந்த ஜெயராம் அவருடைய மனைவி கமலா இவர்கள் இண்டு பேரும் கடலில் குளிக்க சென்றனர். கடல் சேறாக இருப்பது தெரியாமல் அந்த பகுதியில் குளிக்க சென்ற பொழுது திடீரென இடுப்பளவு சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி காப்பாற்றினர்
சீர்காழி ரயில் நிலையத்தில் இன்று காலை திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் விரைவு ரயில் நின்று கிளம்பியது. அப்போது அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் நின்று புறப்பட்ட சில நிமிடங்களில் ரயிலின் பக்கவாட்டில் விழுந்து அடிபட்டு தலையில் படுகாயமடைந்தார். ரயில்வே போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச் 19) அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். மாட்டுச் சந்தையில் மாடுகளை வாங்க வந்த வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாத 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஆரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் அப்பகுதியில் இயங்கும் டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, நடவடிக்கை எடுக்காததால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் வருகை தந்து டாஸ்மாக் கடையை அகற்ற கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி கிராமத்தில் கருப்பண்ணன் என்பவரின் தோட்டத்தில் நேற்று இரவு 25 ஆடுகளை வெறிநாய்கள் கடித்து அனைத்து ஆடுகளும் இறந்து விட்டன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயம் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.