Tamilnadu

News April 27, 2025

விண்ணமங்கலத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் மரணம்

image

திருக்காட்டுப்பள்ளி விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த சம்பத் மகன் யோகேஷ் (16). தனது பிறந்தநாள் அன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் மின்மோட்டாரை இயக்கியுள்ளார். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 27, 2025

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் முன் எச்சரிக்கை நடவடிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயை தடுக்கும் வகையில் மே 28 முதல் 1லட்சத்து 29ஆயிரம் ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் க.சிவசுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இந்த நோய் சிறுநீர், சாணம் போன்றவற்றின் மூலம் வேகமாக பரவுவதால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் போடப்பட்ட ஆடுகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் விவரம் சேமிக்கப்படுகின்றன.

News April 27, 2025

நீட் தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு

image

இந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வு மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதை ஒட்டி திண்டிவனம் Dr.அப்துல்கலாம் நீட் பயிற்சி மையம் சார்பில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 30.04.2025 அன்று காலை 10மணி முதல் 1மணி வரை இலவச நீட் மாதிரித் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என பயிற்சி மைய நிர்வாகி சுப்பிரமணியன் தெரிவித்தார். தொடர்புக்கு: 9942132049/6380044810

News April 27, 2025

அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு

image

காட்டுவிளை பகுதியில் நேற்று மாலை அரசு பேருந்தை, வாலிபர் ஒருவர் வழிமறித்து, பேருந்தின் முன்பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்துள்ளார். இதுகுறித்து, பஸ் ஓட்டுநர் ராஜேஷ்குமார், கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜோயல் ராபர்ட் என்பவரை கைது செய்த போலீசார், அவர்மீது 4 பிரிவுகளில் இன்று வழக்கு பதிவு செய்தனர்.

News April 27, 2025

காஞ்சிபுரம் ஊராட்சிகளுக்கு பறந்த கலெக்டரின் உத்தரவு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். இந்த கூட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். மிக முக்கியமாக மக்கள் பார்வையிட ஊராட்சி தகவல் பலகையில் வரவு செலவு எழுதிடவும், வரவு செலவு கணக்கு குறித்து பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News April 27, 2025

தேனியில் ஒரு இளநீர் ரூ.100 தாண்டும் – விவசாயிகள்

image

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் இளநீரை விரும்பி பருகி வருகின்றனர். நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரக மரங்களின் இளநீர் தேனியில் 60 முதல் 70 வரை விற்பனையாகிறது. இந்நிலையில், ஒரு இளநீர் விலை 100 ரூபாயை தாண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

News April 27, 2025

நெல்லையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் பலி 

image

நெல்லை மாவட்டம் நான்குநேரியை அடுத்த தளபதிசமுத்திரம் அருகே நான்கு வழிச்சாலையில் இரண்டு கார்கள் இன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் குழந்தை உள்பட4 பேர் பலியானதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு ஏர்வாடி போலீசார் விரைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

News April 27, 2025

தஞ்சாவூர்: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு !

image

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..

News April 27, 2025

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் ராமநாதபுரம் MP

image

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக இன்று கோயம்புத்தூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொது செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 27, 2025

மகாராஷ்டிரா மாநில ஆளுநருக்கு வரவேற்பு!

image

அபிராமி அம்மன் பக்தர்கள் குழு சார்பாக திண்டுக்கல் மாநகர் தரகு மண்டி குமாஸ்தாக்கள் சங்க மஹாலில் நடைபெறும் ஆன்மீக கருத்தரங்கத்திற்கு வருகை புரிந்திருக்கும் மகராஷ்டிர மாநில மேதகு ஆளுநர் CPR ராதாகிருஷ்ணன் அவர்களை வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!