India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சிலையின் மீது காதை வைத்துக் கேட்டால், ‘ஓம்’ என சத்தம் கேட்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இங்கு பிள்ளையார், தொந்தி இல்லாமல் காட்சியளிப்பதால் ‘வயிறு தாரி பிள்ளையார்’ எனவும் அழைக்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த தலத்தில் காலை 10 முதல் 12.30 மணி வரையில் பூஜை செய்தால் புண்ணிய பலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!
விநாயகர் சிலைகள் இன்று (புதன்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட உள்ளன. அதன்படி ▶️கொடிவேரி ▶️ புஞ்சைபுளியம்பட்டி ▶️ கள்ளிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறித்தியுள்ளார்.(SHARE பண்ணுங்க)
பொதுவாக விநாயகர் என்றதும் யானை முகமும், பெரிய காதும் தான் ஞாபகம் வரும். ஆனால், திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே சிதிலபதியில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகர் என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இங்குள்ள விநாயகரை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க..
வி.கே.புரத்தை சேர்ந்தவர் சுப்பம்மாள்(70). இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நெல்லை, கொக்கிரகுளம் பகுதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை ஆஸ்பத்திரி ஊழியர் ராமர் (25) திருடினார். உடனே சுப்பம்மாள் சத்தம் போடவே என்ன செயவதென்று தெரியாமல் நகையை விழுங்கியுள்ளார். ஆஸ்பத்திரியில் ராமருக்கு இனிமா மருந்து கொடுத்து நகை வெளியில் எடுக்கப்பட்டது. இதுக்குறித்து பாளை போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி, ஓசூர், தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்த வெங்கட்ராஜ் (32) வசிக்கும் தெரு வழியாக, 15 வயது சிறுவன் அடிக்கடி பைக்கில் வேகமாக சென்றதால், வெங்கட்ராஜ் சிறுவனை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளார். இதில் நவீன்ரெட்டி, அஸ்லம், 15, 18 வயது சிறுவன் என நான்கு பேரை நேற்று (ஆகஸ்ட் 26) போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 5 பேரை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் பாபநாச கால்வாய் ஆக்கிரமிப்பை சரி செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஆக. 26) நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சேலம், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள148 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 29 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணபிக்க <
மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகிலேயே டாஸ்மாக் பார் இயங்கி வருகிறது.நேற்று இரவு கடையில் விற்பனை முடிவடைந்த நிலையில் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பாரை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை வழக்கம் போல் பாரை திறப்பதற்கு ஊழியர்கள் சென்ற போது கதவு உடைக்கப்பட்டு 17,000 ரொக்க பணம் கொள்ளை போயிருந்தது. இதுக்குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை.
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை செய்யப்படும் சிலை நீர்நிலைகளுக்கு எடுத்து கரைக்கப்பட உள்ள இடங்களை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட சாமளாபுரம்குளம், ஆண்டிபாளையம். பி.ஏ.பி வாய்க்கால், பொங்கலூர், எஸ்.வி.புரம் வாய்க்கால்,எஸ்.வி.புரம், பி.ஏ.பி வாய்க்கால், கணியூர் அமராவதி வாய்க்கால், கொடிமேடு ஆகிய பகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.(SHARE)
மதுரை அரசரடி மேற்கு கோட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் மதுரை மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமையில் நடக்கிறது. எனவே மதுரை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் மின் சம்பந்தப்பட்ட குறைகளை நேரிலோ அல்லது மனுக் கள் மூலமாகவோ தெரிவித்து பயன்பெறலாம்.
Sorry, no posts matched your criteria.