India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று (மார்ச் 21) விடுத்துள்ள அறிவிப்பில், நெல்லை தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நாளை (மார்ச் 22) மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். உவரி, குலசேகரப்பட்டினம், பெரியதாழை ஆகிய இடங்களில் நாளை அதிகாலை கன மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளராக அதிமுகவை சேர்ந்த சந்திரமோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அதிமுக கட்சித் தொண்டர்கள் உற்சாகத்தில் கொண்டாட்டம். வருகின்ற 24ம் தேதி திருச்சியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறும் எனவும் தகவல்.
மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் இன்று மதுரை மாவட்ட கழக செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான செல்லூர் கே.ராஜூ மற்றும் R.B.உதயகுமார் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது இருவரும் வேட்பாளர் சரவணன் வாழ்த்தியதுடன் தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொள்வது குறித்து உறுதி அளித்தனர்.
2024 மக்களவைத் தேர்தல், ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணி வேந்தன் போட்டியிடவுள்ளார். கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸிலிருந்து விஷ்ணுபிரசாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை இத்தொகுதியில் திமுக-வே நேரடியாக களம் காண்கிறது. இதில் போட்டியிடும் தரணி வேந்தன், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். செஞ்சி மற்றும் மயிலம், ஆரணியின் விழுப்புர மாவட்ட சட்டமன்ற தொகுதிகள்.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் 24ல் 100 சதவிகித வாக்குபதிவு நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நவீன மின்னணு வாகனத்தில் தேர்தல் விழிப்புணர்வு பாடல் குறும்படங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திரையிடப்பட உள்ளது.
2024 மக்களவைத் தேர்தல், ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணி வேந்தன் போட்டியிடவுள்ளார். கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸிலிருந்து விஷ்ணுபிரசாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை இத்தொகுதியில் திமுக-வே நேரடியாக களம் காண்கிறது. இதில் போட்டியிடும் தரணி வேந்தன், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி ஆகியவை இதன் சட்டமன்றத் தொகுதிகள்.
கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் அண்ணா தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் வாசகி சிறப்பு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் என்எல்சி சுரங்க நிறுவனத்தின் 7 சதவீத பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் மாதவன் நன்றி தெரிவித்தார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுகிறார் என இன்று (மார்ச் 21) காலை அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனுக்கு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சீகம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஆறுமுகம். இவர் வளையப்பட்டியில் உள்ள ஜீவா என்பவரின் வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த குளித்தலை போலீசார் மது விற்ற ஆறுமுகம் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தல், தென்காசி(தனி) தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீ குமார் போட்டியிடவுள்ளார். மயக்கவியல் நிபுணரான இவர் முதன் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். 2002 முதல் திமுக-வில் இணைந்து பணியாற்றி வருகிறார். தென்காசி தொகுதிக்கு வேட்பாளராக, எம்.பி தனுஷ் குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி உட்பட பலர் முயற்சி செய்த நிலையில் இவர் தேர்வாகியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.