India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தலைமையிலான குழுவினர் நேற்று (மார்ச்.18) சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த மினி டாடா ஏ.சி வாகனத்தில் கே.வி குப்பம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.81 ஆயிரத்து 500 தேர்தல் பறக்கும் படை அலுவலர் பூபாலன் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் அலுவலர் மோகனிடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ ஒட்டி, 24 மணி நேரமும் செயல்படும் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு மையத்தை (MCMC) மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு நேற்று (மார்ச் 18) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் பலர் இருந்தனர்.
மேலக்கடையநல்லூர் வடக்குத் தெரு,
தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு வேப்பமரத்து ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் முதற்கால யாகசாலை பூஜை, நேற்று மாலையில் துவங்கியது. மேலக்கடையநல்லூர்
தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில்
அர்ச்சகர் சிவஸ்ரீ முத்துக்குமார் பட்டர் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது
விக்கிரவாண்டி அடுத்த திருநந்திபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற முதியவர் நேற்று (மார்ச் 18) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து, பலமுறை பட்டா மாற்றம் செய்ய மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறினார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் முதியவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது இந்த தர்ப்பூசணி அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் தர்ப்பூசணி கொள்முதல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக டன் ஒன்று ரூ.12,000 விற்ற தர்ப்பூசணி தற்போது ரூ.15,000 முதல் 17,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று(மார்ச் 18) நடந்தது. இவ்விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் பேருரை ஆற்றினார். முதுநிலை பொறியியல் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், தெர்மல் இன்ஜினியரிங் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய துறைகளிலும் மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
காசிமேடு பகுதியில் கலா என்ற 65 மூதாட்டி மகன் சீனிவாசன் உடன் வசித்து வந்தார். அடிக்கடி கலாவுக்கு வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதால், நேற்று கலாவை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில், அரிவாள் மனையால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அரியலூர், நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணி, ஜெயக்கொடி என்பவரும் உறவினர்கள். இந்நிலையில் மணி தன்னுடைய மாமியார் நகையை தர வேண்டும் என ஜெயகொடியிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜெயக்கொடியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் நேற்று(மார்ச்.18) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 24மணி நேரம் தொடர்ந்து செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் , அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு 1800 425 5799 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், 0452 2535374, 2535375, 2535376, 2535377, 2535378 தொலைபேசி எண்களையும் அழைக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு
Sorry, no posts matched your criteria.