India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்பந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிர்ந்தால் அது தொடர்பாக புகார் அளிக்க மதுரை மாவட்ட காவல்துறையில் 24மணி நேரமும் இயங்கி வரும் காவல் கட்டுப்பாட்டு அறை கைபேசி எண்ணை (9498101395) தொடர்பு கொள்ளுமாறு மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் இன்று தெரிவித்துள்ளார். புகார்தாரர் விவரம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிங்காநல்லூரில் சலூன் நடத்தி வரும் ரமேஷ் பழனியப்பனுக்கு கடந்த டிச.மாதம் செல்போனுக்கு வந்த மெசேஜில் தங்களது நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்வதால் குறைந்த காலத்தில் அதிக லாபம் பெறலாம் என குறிப்பிட்டு இருந்துள்ளது. இதனை நம்பி ரூ.38.50 லட்சத்திற்கு பங்குகளை வாங்கியுள்ளார். பின் பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இப்புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளன. அதன்படி மதுரை மாவட்டம் முழுவதும் 884 உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் துப்பாக்கியை ஒப்படைக்க மதுரை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் உள்ளிட்ட தவிர்க்க முடியாத பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதி சேர்ந்த தாமரைச்செல்வி இவர்
அருகே உள்ள விவசாயி பகுதிக்கு வீட்டை பூட்டிவிட்டு சாவியை மின் பெட்டியில் வைத்துவிட்டு சென்றுள்ளார். அப்போது வீடு திரும்பிய தாமரைச்செல்வி இவர் வீட்டில் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்து 13 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர். இந்த சம்பவத்தில் மார்ச் 16ஆம் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தமிழகத்தில் மக்களவை பொதுத் தோ்தல் நடைபெற இருப்பதால் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் தோ்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்ததால் நாளை 18 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகள் தரணி (16) விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று (மார்ச் 16) வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சேலத்தில் வருகின்ற 19ம் தேதி நடக்கும் பாரதிய ஜனதா கட்சி பொதுகூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பேச இருக்கும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் சேலம் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து இன்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உத்தரவிட்டு உள்ளார். மேலும் சேலத்தில் போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (மார்ச் 17) வெளியிட்டுள்ள அறிக்கையில், 19, 26 தேதிகள் வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்று இஸ்லாமியர்கள் ஜும்மா தொழுகை மேற்கொள்வார்கள். எனவே அன்றைய தேதியை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.
தென்காசி மாவட்டம் அருகே கடையம் பகுதியில் சுமார் 2,220 ஆண்டுகளுக்கு முற்பட்டு மிகப்பழமையான மக்கள் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் வாழ்ந்த இடத்தில் கல்லூரி பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வு நடத்தியதில் பழமையான வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதில் பானைகள், தங்கவளையம், கிண்ணம் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் வகையில் இன்று ரயில்வே பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி சுமார் 15க்கும் மேலான போலீசார் இந்த ரோந்து பணியில் ஈடுபட்டு, ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக நபர்களை விசாரித்தும், அவர்கள் உடைமைகளை வாங்கி பரிசோதனை செய்தனர்.
Sorry, no posts matched your criteria.