India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுகை நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளிட்டோர் இரவு 7 முதல் 10 மணி வரை கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க ஆட்சியர் மெர்சி ரம்யாவை ஆட்சியரகத்தில் சந்தித்த ஆக்காட்டி ஆறுமுகம் மற்றும் கந்தர்வகோட்டை செல்ல தங்கையா ஆகியோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். தேர்தல் விதிகளின் அடிப்படையில் தேர்தல் நடைமுறைப்படி ஏழு மணி முதல் 10 மணி வரை நாட்டுப்புற நிகழ்ச்சி நடைபெறவும் காவல்துறை அனுமதி அளிக்கவும் கோரிக்கை மனு அளித்தனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் தேர்தலின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், துப்பாக்கி பயன்படுத்துவோர் தங்கள் துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் தங்கள் பாதுகாப்பு கருதி உரிய அனுமதி பெற்று துப்பாக்கி பயன்படுத்தும் 181 பேர், இன்று போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்தனர்.
மதுரை கூடல்நகர் பகுதியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த 11 வயது மாணவி நேற்று முன் தினம் மாலை வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து, மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில், சிறுமி மரணம் இயற்கையானதா? சிறுமி கொலை செய்யப்பட்டாரா? பாலியல் வன்கொடுமையா ? என்ற அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அமிர்தாம்பிகை உடன் சந்திரசேகர சாமி அமர்ந்து காமக்கூர் கிராமத்தில் முக்கிய வீதிகளில் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மலர்களை தூவி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் கடந்த இரண்டு நாளுக்கு முன்பு வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக அதிமுக சார்பில் ஜான்சிராணி போட்டியிடுவார் என அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச் 23) தெரிவித்துள்ளார்.
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பொது மக்கள் குளிர்ச்சியான தண்ணீரை பெருவதில் அதிக ஆர்வம் காட்டுவர் இதற்காக நாமக்கல்லில் மண் பானை விற்பனை தொடங்கியுள்ளது ரூ.150 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறது. மானாமதுரை திருச்சியில் இருந்து கொண்டு வந்து நாமக்கல்லில் விற்பனை செய்யப்படுகிறது மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளதால் பானை விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரி நாகராஜன் கூறினார்.
தென்காசியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற செயலாளர் வர்கீஸை கடையம் ஒன்றிய செயலாளர் ஆதித்தமிழன் அன்பழகன் மற்றும் ஒன்றிய மாணவரணி நிர்வாகி கார்த்திக் நாடார், ஆழ்வை நகரச் செயலாளர் தங்கராஜா, தென்காசி ரீகன் குமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ஆலோசனை செய்தனர்.
ஆண்டிப்ட்டி பகுதியில் 2024 மக்களவை தேர்தல் தொடர்பாக பறக்கும் படையினர் முறையாக வாகன சோதனையில் ஈடுபடுகின்றனரா? என்று குறித்து இன்று ஆட்சியர் சஜிவனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் அருகே பாம்பன், குந்துகால் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தி சென்று கிளிநொச்சி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கஞ்சா பொட்டலங்களை இலங்கை கடற்படை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது.
திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (33).பஸ் டிரைவர். நேற்று இவர் புதுவையில் இருந்து பண்ருட்டி வழித்தடத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றார்.பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.பாகூர் ஏரிக்கரை சாலை சந்திப்பு அருகே சென்றபோது, ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டது.இதனால் பேருந்து தாறுமாறாக ஓடியது.பயணிகள் பயத்தில் அலறியதில் நடத்துனர் பேருந்தை நிறுத்தினர்.இதனால் பயணிகள் காயமின்றி தப்பித்தனர்.
Sorry, no posts matched your criteria.