India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்றம்பள்ளியில் 23.03.2024 நேற்று மாலை 5 மணியளவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த புள்ளானேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஆவணம் இன்றி ரூபாய் 1, 62, 800 பறிமுதல் செய்து நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சசிகுமார், மனைவி சித்ரா. செஞ்சி அடுத்த நல்லான்பிள்ளைபெற்றால் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணிபுரியும் சித்ரா நேற்று (மார்ச் 23) பணியை முடித்துவிட்டு மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது புத்தகரம் அருகே எதிரே வந்த கார் மோதியதில் நிகழ்விடத்திலேயே பலியானார். இது குறித்து நல்லான்பிள்ளைபெற்றால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி சேர்மன் பீட்டர் ஏசுதாஸ் தலைமை வகித்தார். இயக்குனர் டேவிட் பிலிப் டேனியல் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற நீதிபதி ஜேக்கப் ஆர்.டேனியல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
புதுக்கோட்டை ismart பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார் புதுகை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா.
இந்நிகழ்வின்போது புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மாநகராட்சி உறுப்பினர் காந்திமதி , வட்டக் கழக செயலாளர் பிரேம் ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகளும், பள்ளியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டியில் உள்ள தேவர் சிலை முன்பு, தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கூடி நின்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையும், சமவாய்ப்பு மன்றமும் இணைந்து ‘பெரியார் – வைக்கம் போர் வீரர்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியினை கல்லூரி வளாகத்தில் நடத்தியது. இதில் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியை க.பாரதி கலந்து கொண்டு மாணவியரிடையே உரையாற்றினர்.
மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்காக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் பாதுகாப்பு அம்சங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அன்னசாகரம் கிராமத்தில் பங்குனி உத்திரம் திருவிழா புகழ்பெற்ற அருள்மிகு ஶ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று இரவு 8 மணியளவில் பங்குனி உத்திர திருவிழா விழா கோலாகலம் நடைபெற்றது. விழாவில் வள்ளி முருகப் பெருமான் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஒவ்வொரு தொகுதிக்கும் நியமனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வே. மணிவாசகனை (தலைமை ஆசிரியர் ஓய்வு) அக்கட்சியின் தலைவர் சீமான் நியமனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோருடனான ஆலோசனை கூட்டம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் தலைமையில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச்.23) நடைபெற்றது. இதில் பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.