India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பவானியில் பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் சார்பில் பவானி ராஜயோக தியான நிலையத்தில், 88 ஆவது திரிமூர்த்தி சிவஜெயந்தி விழா நேற்று மாலை நடந்தது. பல பிறவிகளுக்கு புண்ணியத்தை அடைய சோமநாதர் லிங்கத்துக்கு முன் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், பவானி சுற்று வட்டாரத்திலுள்ள 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான நடுக்கம் தீர்த்த பெருமான் எனும் கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. சரபேஸ்வரர் தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலில் உருத்திர பாத திருநாள் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் சாமி வீதி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. நேற்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
காமராஜபுரம் சமூக நல கூடத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இப்தார் நேற்று ( மார்ச்- 23) மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாஹூர் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுக பொது செயலாளர் ஹாஜாகனி , துணை பொது செயலாளர் தாம்பரம் யாக்கூப் மாவட்ட அரசு தலைமை காஜி பஜ்லுல்ஹக் தாவூதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தி.மலை பெரியார் நகரில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அங்கன்வாடி மையங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சத்துமாவுடன் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட பாட்டிலினை மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று வழங்கினார்.
திருச்சியில் நடைபெற்ற திமுக பிரச்சாரக் கூட்டம் குறித்து திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக எனும் தீய சக்தியை வேரோடு பெயர்த்து எறிவதற்காக களப்பணியை திருச்சி மண்ணிலிருந்து போர் முரசு கொட்டி தொடங்கியிருக்கிறது. எனவே வெற்றி பெற்று இந்தியா கூட்டணி தலைமையிலான அரசுக்குப் பட்டாபிஷேகம் நடக்கும் என்றார்.
புதுச்சேரி மக்களவைத் தேர்தல் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழ் வேந்தன் நேற்று உழவர்கரை தொகுதி சமூக சேவகரும் வழக்கறிஞரும் ஆன சசிபாலனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்தார். மேலும் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநில மற்றும் தொகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
நாட்றம்பள்ளியில் 23.03.2024 நேற்று மாலை 5 மணியளவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த புள்ளானேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஆவணம் இன்றி ரூபாய் 1, 62, 800 பறிமுதல் செய்து நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சசிகுமார், மனைவி சித்ரா. செஞ்சி அடுத்த நல்லான்பிள்ளைபெற்றால் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணிபுரியும் சித்ரா நேற்று (மார்ச் 23) பணியை முடித்துவிட்டு மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது புத்தகரம் அருகே எதிரே வந்த கார் மோதியதில் நிகழ்விடத்திலேயே பலியானார். இது குறித்து நல்லான்பிள்ளைபெற்றால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி சேர்மன் பீட்டர் ஏசுதாஸ் தலைமை வகித்தார். இயக்குனர் டேவிட் பிலிப் டேனியல் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற நீதிபதி ஜேக்கப் ஆர்.டேனியல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
புதுக்கோட்டை ismart பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார் புதுகை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா.
இந்நிகழ்வின்போது புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மாநகராட்சி உறுப்பினர் காந்திமதி , வட்டக் கழக செயலாளர் பிரேம் ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகளும், பள்ளியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.