India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கறம்பக்குடி தாலுக்கா குழந்திரான்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையா, இவர் தற்போது புதுக்கோட்டை நகரில் வசித்து வருகிறார். கருப்பையா அரசு ஒப்பந்ததாரராக அதிமுக ஆட்சி காலத்தில் உருவெடுத்து தற்போது அரசு பணிகளில் ஒப்பந்தம் மூலம் பணிகள் செய்து வருகிறார். தற்போது அதிமுக சார்பில் இன்று திருச்சி திருச்சி மக்களவைத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசின் விடுமுறை தினமான 25ஆம் தேதி திங்கட்கிழமை ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு (ஓபிடி ) இயங்காது. எனவே அன்றைய தினம் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
வேலூரில் அதிவேகமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்குகள் செல்வதாக எஸ்.பி மணிவண்ணனுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர் உத்தரவின் பேரில் போக்குவரத்து ஆய்வாளர் அறிவழகன் தலைமையிலான போலீசார் இன்று (மார்ச்.21) வேலூர் மக்கான் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக பைக் ஓட்டி வந்த 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் உரிமையாளருக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
நீண்ட காலமாக அதிமுக வசம் இருந்த பொள்ளாச்சித் தொகுதியை கடந்த 2019ஆம் ஆண்டுதான் திமுக வென்றது. 9 முறை அதிமுக வென்ற தொகுதியை திமுக-வின் சார்பில் போட்டியிட்ட கு.சண்முகசுந்தரம் வெற்றிபெற்றார். ஆனால், இம்முறை வேட்பாளரை திமுக மாற்றியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்வரசாமி இத்தொகுதியில் போட்டியிடவுள்ளார். உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகியவை பொள்ளாச்சித் தொகுதிக்குள் அடங்கும்.
நீண்ட காலமாக அதிமுக வசம் இருந்த பொள்ளாச்சித் தொகுதியை கடந்த 2019ஆம் ஆண்டுதான் திமுக வென்றது. 9 முறை அதிமுக வென்ற தொகுதியை திமுக-வின் சார்பில் போட்டியிட்ட கு.சண்முகசுந்தரம் வெற்றிபெற்றார். ஆனால், இம்முறை வேட்பாளரை திமுக மாற்றியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்வரசாமி இத்தொகுதியில் போட்டியிடவுள்ளார். தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி,வால்பாறை(தனி) ஆகியவை இத்தொகுதிக்குள் அடங்கும்.
2019ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்த நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது திமுக-வே போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சர் கே.என்.நேருவின் மகன். லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர், சட்டமன்றத் தொகுதிகள், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள் அடங்கும்.
2019ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்த நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது திமுக-வே போட்டியிடுகிறது.இதன் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சர் கே.என்.நேருவின் மகன். கடந்த தேர்தலிலேயே இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குளித்தலை, பெரம்பலூர் தொகுதியாகும்.
வேலூர் மாவட்டம்,காட்பாடி காங்கேயநல்லூர் அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாள் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.இதில் 700க்கும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்த நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது திமுக-வே போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சர் கே.என். நேருவின் மகன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திமுக-வில் தஞ்சாவூர் தொகுதியில் 1996ஆம் ஆண்டிலிருந்து ஆறு தேர்தல்களாக தொடர்ந்து வெற்றி பெற்று வருபவர் பழனிமாணிக்கம். இந்த முறையும் அவருக்கே வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், புதுமுகமான முரசொலியைக் களமிறக்கியிருக்கிறது திமுக தலைமை. முரசொலி, 2014 முதல் 20 வரை திமுக-வின் பொதுக்குழு உறுப்பினராகவும், 2022இல் இருந்து தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளராகவும் இருந்தார்.
Sorry, no posts matched your criteria.