India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எட்டையாபுரம் அருகே சிந்தலக்கரையில் வைத்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் வரும் 26 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று தூத்துக்குடி , ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக பந்தல் அமைக்கும் பணி வாகன நிறுத்துமிடம், குடிநீர்,கழிவறை போன்ற வசதிகள் செய்வதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திமுக மாவட்ட துணைச் செயலாளரும்,
செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு.பெ.கிரி தலைமையில், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் C.N.அண்ணாதுரை, திமுக நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். இதில் ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, தர்மபுரியில் மருத்துவர் கா.அபிநயா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் முன்னிலையில் 88 துப்பாக்கிகளும், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 25 துப்பாக்கிகளும் என திண்டுக்கல் மாவட்டத்தில் 36 போலீஸ் நிலையத்தில் 978 துப்பாக்கிகளும் அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம்
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகையில்
உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கோவிலில் சுவாமியை வணங்கி அங்குள்ள பொது மக்களுக்கு பிரசாதங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பெரியசோரகை ஊர் பொதுமக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் (45). இவர் ஶ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தார். நேற்று பணியில் இருந்த முத்துக்குமரன் ஸ்ரீபெரும்புதூரில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் சாலை இணையும் கூட்டு சாலையில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் பொழுது லாரி மோதியதில் லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, மத்திய சென்னையில் மருத்துவர் இரா.கார்த்திகேயன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 6 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் நேற்று கொளுத்தியது. அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வரும் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமமுக சார்பில் 2 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, தேனியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் வி.டி.நாராயணசாமியும், திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமமுக சார்பில் 2 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, திருச்சியில் செந்தில்நாதன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.