Tamilnadu

News March 29, 2024

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை

image

சின்னமனூர் நகராட்சியில் சொக்கநாதபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் என மூவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 29, 2024

தெரு நாய் கடித்ததில் 2 சிறுவர்கள் காயம்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 35 ஆவது வார்டு பகுதியில் தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் இன்று (மார்ச்.29) விளையாட சென்ற 2 சிறுவர்களை
துரத்திச் சென்று கடித்ததில் 2 சிறுவர்கள் காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 29, 2024

ரயிலில் வந்த சிறுவன் மீட்பு

image

சென்னை – எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் செங்கல்பட்டிலிருந்து 11 வயது சிறுவன் ஏறினார். டிக்கெட் பரிசோதனையில் சிறுவனிடம் நடத்திய விசாரணையில் பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வந்ததாக கூறியுள்ளான். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் திண்டுக்கல் ரயில்வே போலீசிடம் சிறுவனை ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் சிறுவனை ஒப்படைத்தனர்.

News March 29, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் அறிவிப்பு

image

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பஸ் பயண சலுகையின் செல்லத்தக்க காலம் 31.3.2024 ஆகும். இந்நிலையில் சலுகை காலம் முடிவடைய உள்ளதாலும், நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாலும் 2023-24-ல் வழங்கப்பட்ட அதே பஸ் பயண அட்டையை 30.6.2024 வரை மாற்றுத்திறனாளிகள் தங்கு தடையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என கடலூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.

News March 29, 2024

வானூர் அருகே விபத்தில் வேன் ஓட்டுநர் பலி

image

வானூர், சின்னமுதலியார்சாவடியை சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் ஹரிதாஸ்(22). இவர் நேற்று முன்தினம் மொரட்டாண்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது குமாரி என்ற பெண் மீது பைக் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் ஹரிதாஸ் உயிரிழந்தார். இது குறித்து ஆரோவில் போலீசார் நேற்று(மார்ச் 28) வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News March 29, 2024

சேலத்தில் நாளை முதலமைச்சர் பிரச்சாரம்

image

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் மலையரசன், சேலம் தொகுதி வேட்பாளர் செல்வ கணபதி ஆகியோருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக நாளை மாலை 6 மணி அளவில் பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள அண்ணா திடலில், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் வாக்கு கேட்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

News March 29, 2024

“11லிருந்த இந்தியா 5வது இடத்திற்கு வந்துள்ளது”

image

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தமாகா வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “பொருளாதரத்தில் 11வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 5வது இடத்திற்கு வந்துள்ளது; இதுதான் பாஜகவின் வளர்ச்சி; சொத்துவரி, பால் வரி என அனைத்தையும் அதிகரித்துதான் திமுகவின் சாதனை; பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்கவில்லை என பேசி வருகிறார்.

News March 29, 2024

கும்பகோணம்: அடையாள அட்டையை ஒப்படைக்க முடிவு

image

கரும்புக்கான நிலுவை தொகையை வழங்கக் கோரி திருஆரூரான் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள், கும்பகோணம் கோட்டாட்சியரகத்துக்கு நேற்று(மார்ச் 28) வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்க முடிவு செய்து வந்தனா். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினா், உரிய அனுமதி பெற்ற பின்பு சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா். இதை ஏற்ற விவசாயிகள் மாா்ச் 30ம் தேதி சந்திப்பதற்கான மனுவை அளித்து சென்றனர்.

News March 29, 2024

ஈரோட்டில் நீர்மட்டம் 53 அடியாக சரிவு

image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணையாகும். இதன் மொத்த நீர்மட்ட உயரம்
105 அடி, கொள்ளளவு 32.8 டிஎம்சி ஆகும். இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 53.32 அடி, நீர் இருப்பு 5.27 டி.எம்.சி, நீர் வரத்து வினாடிக்கு 27 கன அடியாக உள்ளது . மேலும் பாசனம் மற்றும் குடிநீருக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

News March 29, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து: ஒருவர் பலி

image

ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவரது நண்பர் கவுசிக் இவர்கள் இருவரும் சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தனர். நேற்று காலை வழக்கம்போல் இருவரும் டூவீலரில் கல்லூரிக்கு சென்றனர். பல்லாவரம் மேம்பாலம் அருகே சாலையில் எதிர் திசையில் பயணித்தனர். அப்போது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதி ஆகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கவுசிக் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!