Tamilnadu

News March 24, 2024

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

அரக்கோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தல் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இந்த தேர்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீர் ஆய்வு செய்தார். அப்போது எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறு தேர்தலில் இருக்கக் கூடாது. எல்லா தகவல்களையும் தெளிவாக தேர்தல் பயிற்சி வகுப்பில் கற்றுக் கொள்ள வேண்டும். மறு தேர்தல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக மிகஅவசியம் என்றார்.

News March 24, 2024

வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை

image

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

News March 24, 2024

மது விற்பனை செய்த 14 பேர் கைது

image

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு, சித்தாமூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வீடுகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர்கள்,அரசு அனுமதியின்றி பனைமரத்தில் கள் இறக்கி விற்பனை செய்தவர்கள் என 3 பெண்கள் உட்பட 14 பேரை மதுராந்தகம் மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 150 மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனர்.

News March 24, 2024

வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை

image

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

News March 24, 2024

வாக்களிப்பதன் அவசியம் என்ன? – உறுதிமொழி ஏற்ற மாணவிகள்!

image

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடம்பாக்கம் அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அனைவரும் வாக்காளர் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

News March 24, 2024

வளசரவாக்கம் குடிநீர் குழாய் உடைப்பு – பொதுமக்கள் அவதி

image

சென்னை போரூர் சிக்னல் அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக சாலையில் ஓடியது. இந்த தண்ணீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது . சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் வளசரவாக்கம் மற்றும் ஆற்காடு பிரதான சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கின.

News March 24, 2024

கன்னியாகுமரி: செல்போன் பறித்த சிறுவர்கள் கைது

image

கன்னியாகுமரி அருகே உள்ள சிலுவை நகர் பகுதியை சேர்ந்தவர் சூசை (57), மீனவர்.
இவர் கன்னியாகுமரியில் சீரோ பாயிண்ட் பகுதியில் நேற்று செல்போன் பேசிய படி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 15 வயது மதிக்கத்தக்க 3 சிறுவர்கள் அவரை பின் தொடர்ந்து வந்தனர். திடீரென சூசை கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் 3 சிறுவர்களையும் கைது செய்தனர்.

News March 24, 2024

நாமக்கல்: க்யூ. ஆர் கோடு ஸ்கேன் வசதி அறிமுகம்

image

2024 மக்களவை தேர்தலையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் ஏப் 19ல் 100% வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா அழைப்பிதழ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் அந்த அழைப்பிதழில் உள்ள க்யூ. ஆர் கோடு ஸ்கேன் செய்தால் வாக்காளர்களின் வாக்குச்சாவடி அறியும் வசதி செய்யப்பட்டுள்ளது இந்த அழைப்பிதழ் அனைவரையும் கவர்ந்துள்ளது

News March 24, 2024

வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்த துணை மேயர்

image

‘கடலூர் பாராளுமன்ற தொகுதியின் இண்டியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் எம்.பி-யை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்தி வரவேற்கிறோம்’ என்று கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பா.தாமரைச்செல்வன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News March 24, 2024

விருதுநகர்:ஆடு வெங்காயத்தை தின்றதால் ஏற்பட்ட பிரச்சனை

image

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசி (33).பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது கடையில் இருந்த வெங்காயத்தை வீரம்மாள் என்பவர் வளர்த்து வரும் ஆடுகள் தின்றுவிட்டதாகவும்,இதனால் ஆடுகளை விரட்டியதால் ஆத்திரமடைந்த வீரம்மாள் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து மலையரசியை தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தாலுகா போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!