India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா கூட்டணி சாா்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீகுமாா் அறிமுகக் கூட்டம் இன்று காலையில் தென்காசியில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினாா். இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவா் மாடசாமி ஜோதிடா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, நெல்லையில் சத்யா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 17 வயது சிறுமிக்கு அவருடைய அக்காள் கணவர் திருவிழாவின் நேரத்தின் போது வீட்டிற்கு வந்து சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அக்காள் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கிருஷ்ணகிரியில் வீரப்பனின் மகள் வித்யா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட விருப்பமுள்ள விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரா்கள், படைவீரர் நல உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு அசல் படைப்பணிச் சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று, தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04146-220524 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பாபு இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் நோட்டீஸ் வழங்கி இரட்டை இலை சின்னத்தில் தங்களது வாக்கினை செலுத்துமாறு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது ஏராளமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் புதுவை பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் நாளை(25.3.2024) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். பாஜக, என்ஆர் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் (ம) தொண்டர்கள் கருவடிக்குப்பம் சித்தானந்த கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஆதரவாளர்கள் உடன் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி – மீஞ்சூர் ரயில் நிலையங்கள் இடையே, வரும் 25, 26, 27 ஆகிய நாட்களில் காலை 9:25 மணி முதல் 11:40 மணி வரை ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மார்கத்தில் மூன்று நாட்களுக்கு, ஏழு மின்சார ரயில்களின் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.