India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, கோவை மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9952507068-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்கள், தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க தமிழக அரசின் சார்பில் ரூ. 5,000 மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தைப் பெற தகுதியுள்ள பெண்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2025 – கால்பந்து போட்டியை இன்று ஆக.26 விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தொடக்கி வைத்தனர். உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (ஆகஸ்ட் 26) வெளியிடப்பட்ட விலை நிலவரப்படி, எள் அதிகபட்சமாக ₹8,500க்கும், மக்காச்சோளம் ₹2,369க்கும், மணிலா ₹7,930க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருப்பது உறுதியாகியுள்ளது.
திருச்சி கம்பரசம்பேட்டை அருகே அமைந்துள்ள பறவைகள் பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாதத்தின் கடைசி புதன்கிழமை மூடப்படுவது வழக்கம். இந்நிலையில் நாளைய தினம் புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால், பொதுமக்கள் வருகையை கருத்தில் கொண்டு, நாளைய தினம் பறவைகள் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுர் மாவட்டம் கும்முடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் பயிலும் 10ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளுக்கு தீடிரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த புகையின் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் வழியாக செல்லும் 20671/20672 மதுரை – பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலில் நாளை புதன்கிழமை முதல் திங்கள்கிழமை வரையிலான, இந்த ரயில்கள் நாமக்கலில் புறப்படும் நேரம் (செவ்வாய் தவிர மற்ற நாட்கள்) காலை 8:30 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலும், மாலை 5:25 மணிக்கு 20672 மதுரை வந்தேபாரத் ரயிலும் செல்வதால் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
தென்காசி நகரத்திற்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளியான காட்டுபாவா நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை நாளை (26/08/25) செவ்வாய்கிழமை காலை 8 மணியளவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் நகர்மன்ற தலைவர் சாதிர் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். இந்த நிகழ்வில் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
தூத்துக்குடி பாலசுப்ரமணியன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். நெல்லையப்பர் கோவிலின் மர மண்டபத்தில் உள்ள கடைகள் கோவிலின் பழமையான கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் எனவும், மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து உதாரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். கடைகளை அகற்றவும், கோவிலை நினைவுச்சின்னமாக அறிவிக்கவும் கோரினார். நீதிபதிகள் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
சேலம் மாவட்டம், காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து கொச்சின், பெங்களூருவுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் இன்று (ஆக.26) இயக்கப்படவிருந்த அனைத்து விமான சேவைகளையும் அலையன்ஸ் ஏர் நிறுவனம் (Alliance Air) ரத்துச் செய்துள்ளது. இந்த தகவலை சேலம் விமான நிலைய நிர்வாகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.