Tamilnadu

News August 26, 2025

திருச்சி: தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் அறிக்கை

image

திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் விமலா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசின் தொழிலக பாதுகாப்பு இணையதளம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பதிவு பெற்ற தொழிற்சாலைகள் https://dish.in.gov.in என்ற இணையதளத்தில் தொழிற்சாலை விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

குமரியில் இப்படி ஒரு அதிசிய விநாயகரா?

image

குமரி: கேரளபுரத்தில் அரசமரத்தடியில் எழுந்தருளியிருக்கும் இந்த அதிசிய விநாயகர் தை முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும் மாறி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.மிகவும் பிரசித்திபெற்ற இந்த விநாயகருக்கு நாளை(ஆக.27) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இங்க நடக்கவிருக்கும் சிறப்பு பூஜையில் நீங்களும் உங்க குடும்பத்தோட போய் தரிசனம் செய்து பாருங்க.. SHARE IT

News August 26, 2025

நீலகிரி: ரூ.25,500 சம்பளத்தில் அரசு வேலை!

image

நீலகிரி மக்களே, வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 394, ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Intelligence Officer Grade-II) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.25,500 முதல் அதிகபடியாக ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 14.09.2025 தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 26, 2025

ராணிப்பேட்டை: 196 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி

image

விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னேற்பாடு பாதுகாப்பு பணிகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், 2-வது கட்ட ஆய்வுக் கூட்டம் நேற்று (ஆக.25) நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை வைத்து வழிபட மொத்தம் 196 இடங்களில் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

கள்ளக்குறிச்சி: தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 29ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் முகாமில் விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.த னியார் துறையில் வேலை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

திருப்பூர்: நாளை கடைசி ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

image

திருப்பூர் மக்களே.., நமது ஊரில் உள்ள டைடல் பார்க்கில் ‘Manager’, ‘Technical Assistant’, ‘Executive Assistant’போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ரூ.25,000 முதல், ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் இதற்கு போதுமானது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து ஆக.27 நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 26, 2025

கரூர்: ரூ.25,500 சம்பளத்தில் அரசு வேலை!

image

கரூர் மக்களே, வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 394, ஜூனியர் புலனாய்வு அதிகாரி (Intelligence Officer Grade-II) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.25,500 முதல் அதிகபடியாக ரூ.81,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 14.09.2025 தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 26, 2025

சென்னைக்கு மழை இருக்கு

image

சென்னையில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்ப நிலையை பொறுத்தவரையில் அதிகப்பட்சமாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 26, 2025

சேலம்: காலை உணவு திட்டத்தில் 11,488 பேர் பயன்பெறுவர்!

image

காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புற அரசு உதவிபெறும் 2,429 பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்து இன்று (ஆக.26) தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் மொத்தம் 61 பள்ளிகளில் 11,488 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 26, 2025

செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க

image

செங்கல்பட்டில் வரும் ஆக.30ஆம் தேதி சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும் முகாமில் 8th, பட்டப்படிப்பு மற்றும் BE, ITI, டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் <>இந்த <<>>லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு இந்த 044-27426020, 9384499848 எண்களில் அழைக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!