Tamilnadu

News March 18, 2024

திருமங்கலத்தில் தேர்தல் நடைமுறையை அமல்படுத்தாத அதிகாரிகள்

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என கடந்த 16ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்த நிலையில் முதல்வர் படம் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால் மூன்று நாட்களாகியும் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள முதல்வர் படம் மற்றும் அரசின் சாதனை விளக்க பதாகைகள் இதுவரை அகற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

News March 18, 2024

விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டிய விருதுநகர் ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனையில் நேற்று அரசு பேருந்துகள், அனைத்து அரசு வாகனங்களிலும் என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

News March 18, 2024

சேலம் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

image

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சேலம் வர உள்ள நிலையில், விமான நிலையத்தில் வந்துச் செல்லும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். ஹெலிகாப்டரில் வரும் பிரதமர், சேலம் விமான நிலையம் வந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News March 18, 2024

குமரி எஸ்பி முக்கிய அறிவிப்பு

image

குமரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் சம்மந்தப்பட்ட தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிர்ந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என குமரி எஸ்பி தெரிவித்துள்ளார். இதற்காக, எஸ்பி அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கிவரும் மொபைல் எண்ணை(70103 63173) தொடர்புகொள்ளலாம் என எஸ்பி சுந்தரவதனம் அறிவுறுத்தியுள்ளார்.

News March 18, 2024

நாடாளுமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றத்தின் சிறப்பு

image

மதுரை மாவட்டத்திலேயே 2 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் தனித்துவம் பெற்றுள்ளது. 38 ஊராட்சிகளை உள்ளடக்கிய திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகவும், 6 ஊராட்சிகள் மதுரை நாடாளுமன்ற தொகுதியிலும் உள்ளது. ஒரே ஊராட்சி ஒன்றிய மக்கள் இரு எம்பி-க்களை தேர்வு செய்ய உள்ளனர்.

News March 18, 2024

தூத்துக்குடியில் தமிழிசை போட்டி?

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இவர்,தற்போது தென் சென்னை, புதுச்சேரி, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019 தேர்தலில் இவர் தூத்துக்குடியில் போட்டியிட்ட நிலையில் மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிடுவாரா?

News March 18, 2024

கன்னியாகுமரியில் தமிழிசை போட்டி!

image

புதுச்சேரி, தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் தனது விலகல் குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி, தென்சென்னை அல்லது நெல்லை, குமரி ஆகிய தொகுதிகளில் ஒன்றில பாஜக சார்பில் தமிழிசை போட்டியிட வாய்ப்புள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் இவர் தூத்துக்குடியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2024

திருநெல்வேலியில் தமிழிசை போட்டி?

image

புதுச்சேரி துணை நிலை ஆளுநர், தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். விலகல் குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். இவர் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு கனிமொழியிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2024

தென்சென்னையில் தமிழிசை போட்டி?

image

புதுச்சேரி, தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். விலகல் குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். இந்நிலையில் தென் சென்னை, புதுச்சேரி, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் இவர் தூத்துக்குடியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2024

புதுச்சேரியில் தமிழிசை போட்டி?

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்த தனது ராஜினாமாக கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இவர் புதுச்சேரியில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

error: Content is protected !!