India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஆக.25) முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (26) காலை உணவுத்திட்டத்தை நகர்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளிகளில் விரிவுப்படுத்தி துவக்கி வைக்க உள்ளதையொட்டி, அதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் மேற்க்கொள்ள உள்ள முன்னேற்பாடுகள் குறித்து, ஆய்வு கூட்டம் ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைப்பெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னையில் பதிவு செய்யப்பட்ட 6 கட்சிகளின் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என இன்று (ஆக.26) விளக்கம் அளிக்கும்படி கட்சிகளுக்கு தலைமை தேர்தல் அலுவலகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. 6 ஆண்டுகளாக இந்த கட்சிகள் எந்த தேர்தலிலும் போட்டியிடாததால் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதில் மனிதநேய மக்கள், பெருந்தலைவர் மக்கள், மக்கள் தேசிய, கோகுல மக்கள், இந்திய லவ்வர்ஸ் பார்டி, இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிகள் உள்ளது.
கரூர் மாவட்டத்தில் தற்போது 2025 காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் வாழை, மரவள்ளி, மஞ்சள், தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற பயிா்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதன் மூலமாக காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம்.
மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தகவல். அளித்துள்ளார்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் சரகத்தின் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஆர் செந்தில்குமார் நீலகிரி மாவட்டம் தோவாளா காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் அந்தியூர் காவல் சரகத்தின் புதிய காவல் ஆய்வாளராக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஏ.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கான உத்தரவினை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சசி மோகன் ஐபிஎஸ் பிறப்பித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் (25/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
விழுப்புரம் மாவட்டத்தில் (ஆகஸ்ட் 25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நேற்று (ஆக.25) தமிழ் திரைப்பட நடிகையான சஞ்சிதா ஷெட்டி சுவாமி தரிசனம் செய்தார். இவர் சமீபத்தில் வெளிவந்த சூது கவ்வும் படத்தில் நடித்துள்ளார். இவர் தரிசனம் முடித்துவிட்டு வந்த பின் இவருடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் பாடகி சிறுமி தியா தனது இனிமை குரலால் நடிகைக்கு முருகன் பாடலை பாடி ஆச்சர்ய படுத்தினார்.
எடுத்தவாய்நத்தத்தை சேர்ந்த கோபிநாத், திருமால் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். கோபிநாத் மனைவி சுந்தரி வீட்டின் முன்பு கழிவுநீர் கால்வாயில் இருந்த வாட்டர் பாட்டில், குப்பைகளை அகற்றும் போது திட்டியதாகவும், இதனை கேட்ட திருமால், திருநாவுக்கரசு, மாயகிருஷ்ணன், நைனாம்மாள் ஆகியோர் சேர்ந்து கோபிநாத்தை கல்லால் அடித்து கொலைமிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரில் நேற்று 4பேர் மீது வழக்குபதிந்தனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மக்கள் செய்தி தொடர்பு அலுவலகம் சார்பில் அரசு பொருட்காட்சி கடந்த 4ம் தேதி துவங்கியது. இன்று வரை 17 நாட்கள் நடைபெற்ற இந்த அரசு பொருட்காட்சியை 25,191 பெரியவர்களும், 4,108 சிறியவர்களும், கண்டு ரசித்துள்ளனர். 26 அரசுத்துறைகள் ஆறு அரசு சார்பு நிறுவனங்கள் என 32 அரங்குகளும், பொழுதுபோக்குகளும் கொண்ட கண்காட்சி வருகின்ற 21.9.2025 வரை நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.