India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி அவதானப்பட்டியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, 35 மாணவ மாணவிகளுக்கு சோ்க்கை ஆணையை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் நேற்று (ஆகஸ்ட் 25) வழங்கினாா்.
ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். 2025-2026 ஆண்டில் முதலாமாண்டு இணையும் மாணவர்கள் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகைக்கென உள்ள நோடல் அலுவலரை அணுகி UMIS (https://umis.tn.gov.in/) என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 1800-599-7638 எண்னை தொடர்புகொள்ளலாம். இத்தகவலை ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரத்தில் நேற்று (ஆகஸ்ட் 25) தனியார் நிதி நிறுவன வங்கி அதிகாரியை கத்தியால் குத்திய வழக்கில் குணா என்ற நபரை காவல்துறை கைது செய்தனர். வீடு கட்டுவதற்காக பெற்ற கடனை செலுத்த தவறிய நிலையில், கடனை திரும்ப செலுத்த சொல்லி தொடர்ந்து குணாவை நிதி நிறுவன ஊழியர் வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குணா அவரை கத்தியால் குத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், திருவண்ணாமலை மாநகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வட்டார அளவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் எஸ்.மூா்த்தி தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் நேற்று மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளா் கே.ராணி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
கும்மிடிப்பூண்டி அருகே காயலார்மேடு அரசு தொடக்கப்பள்ளி சமையல் அறையில் சமையலர் அபிராமி நேற்று மதிய உணவு சமைக்கும் போது எரிவாயு கசிவால் தீப்பற்றியது. அருகில் இருப்பவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாத நிலையில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அனைத்தனர். இதில் யாருக்கும் காயமில்லாத நிலையில், இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த அண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி இந்திரா. இருவரும் நேற்று மாலை ஆரூரில் இருந்து தர்மபுரிக்கு மொபெட்டில் வந்தனர். அப்போது இந்திராவின் சேலை மொபெட் வீலில் சிக்கி இருவரும் கீழே விழுந்தனர். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது இந்திரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அரூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் விடுமுறை, முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று 26ம் தேதி 675 பேருந்துகள், 28ம் தேதி 610 பேருந்துகள், 29ம் தேதி 405 பேருந்துகள், 30ம் தேதி 380 பேருந்துகளும், 31ம் தேதி 875 பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட உள்ளது. SHARE
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் வாகனத்தை இயக்கினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், வாகன உரிமையாளருக்கு ரூ 25,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், வாகனத்தை இயக்கிய சிறாருக்கு 25 வயது நிரம்பும் வரை ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்படும் எனவும், மேலும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளருக்கு சிறை தண்டனை கிடைக்க பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.
பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு குமாரசாமிப்பட்டி வேளாண்மை பொறியியல் துறையின் சேலம் செயற்பொறியாளர் அலுவலகத்தையோ (அ) மேட்டூர், ஆத்தூர், சங்ககிரி (அ) தங்கள் பகுதியில் அருகில் உள்ள வேளாண்மை பொறியாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
சிவகங்கை மாவட்டம், சருகணி அருகே பொன்னலிக்கோட்டை கிராமத்தில் உள்ள ஐயனாா் கோயிலுக்கு, இப்பகுதி இஸ்லாமியா்களால் மானியமாக விடப்பட்ட சுமாா் ஒன்றேகால் ஏக்கா் நஞ்சை நிலம் உள்ளது. இந்த நிலம் தனியாா் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்ட விவரம், கிராம மக்களுக்கு தெரிய வந்தது. எனவே இந்த கோயில் நிலத்தை மீட்டு தர இப்பகுதி மக்கள் நேற்று போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.