India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உசிலம்பட்டியில் உள்ள தேவர் சிலை முன்பு, தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கூடி நின்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையும், சமவாய்ப்பு மன்றமும் இணைந்து ‘பெரியார் – வைக்கம் போர் வீரர்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியினை கல்லூரி வளாகத்தில் நடத்தியது. இதில் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியை க.பாரதி கலந்து கொண்டு மாணவியரிடையே உரையாற்றினர்.
மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்காக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் பாதுகாப்பு அம்சங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி நேற்று ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அன்னசாகரம் கிராமத்தில் பங்குனி உத்திரம் திருவிழா புகழ்பெற்ற அருள்மிகு ஶ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று இரவு 8 மணியளவில் பங்குனி உத்திர திருவிழா விழா கோலாகலம் நடைபெற்றது. விழாவில் வள்ளி முருகப் பெருமான் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஒவ்வொரு தொகுதிக்கும் நியமனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வே. மணிவாசகனை (தலைமை ஆசிரியர் ஓய்வு) அக்கட்சியின் தலைவர் சீமான் நியமனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோருடனான ஆலோசனை கூட்டம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் தலைமையில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச்.23) நடைபெற்றது. இதில் பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், மணி ஆகிய இருவரும் நேற்று சாலையில் நடந்து சென்றனர். அப்போது அவ்வழியே மதுபோதையில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்குதல் நடத்தியதில் இருவரும் ரத்தகாயத்துடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு வித்திட்டவர். மிகவும் துடிப்பாக செயல்படக்கூடியவர் என்ற நற்பெயர் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணி 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணி 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கடலூரில் காங்கிரஸ் வேட்பாளராக விஷ்ணு பிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.