Tamilnadu

News April 28, 2025

விழுப்புரம் ரயில் நிலையத்தில் குட்கா 30 கிலோ பறிமுதல்

image

விழுப்புரம் ரயில் நிலையம், நேற்று நிஜாமுதின் – கன்னியாகுமரி நோக்கி செல்லும் திருக்குறள் அதிவிரைவு ரயிலில் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் தலைமையிலான ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கழிப்பறை அருகே கேட்பாரற்ற நிலையில், வெள்ளை நிற சாக்கு பை கிடந்தது. சோதனை செய்ததில் 30 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News April 28, 2025

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

திருச்சியை சேர்ந்த 8 வயது சிறுமி கோவில் திருவிழாவுக்காக தன் பாட்டி ஊரான காரையூர் அருகே கரையான்பட்டிக்கு நேற்று முன்தினம் வந்தார். இந்நிலையில் திருவிழா நடந்த இடத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, மைக்செட் அமைப்பாளரான பிரேம்குமார் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் பெயரில் காவல்துறை பிரேம்குமாரை போக்சோவில் கைது செய்தனர்.

News April 28, 2025

கொலை வழக்கில் 6 பேர் கைது

image

தொட்டியம் அருகே கல்லுப்பட்டியில் விவசாயி சுப்பிரமணியன் கடந்த 25ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மணமேட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வேல்முருகன் (22), இன்பரசன் (19), கரண் (22), நவீன் (19), சசிகுமார் (42) மற்றும் சரவணன் (38) ஆகிய 6 பேரை தொட்டியம் போலீசார் கைது செய்தனர்.

News April 28, 2025

மனைவி திட்டியதால் கணவன் தற்கொலை

image

ஆா்.கே.பேட்டை, பைவலசா கிராமம் தொம்பர காலனியைச் சோ்ந்தவா் முத்து (36). இவர், கட்டட வேலை, செங்கல்சூளை வேலை செய்து வந்தாா். நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு 9 மணி அளவில் வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மனைவி சுதா அவரைக் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த முத்து, அன்றிரவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

News April 28, 2025

ஜல்லிக்கட்டு செல்ல மனைவி எதிர்ப்பு: வாலிபர் தற்கொலை

image

மதுரை கூடல்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (26). பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர், கோமதிபுரத்தை சேர்ந்த அட்சயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ஹரிஹரன் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சென்று வந்தார். ஆனால், அவரது மனைவிக்கு இது பிடிக்கவில்லை. இதனால், கோபித்து கொண்டு அட்சயா, தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஹரிஹரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News April 28, 2025

தி.மலை கோயில் பணம் வீண்- ஐகோர்ட் கேள்வி

image

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ஒரு நிறுவனம் சார்பில் அன்னதானம் சமைப்பதற்கு சிலிண்டர் ஒன்று ரூ.1,830க்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் வேறு ஒரு நிறுவனத்திடம் தலா ரூ.1,950 வீதம் எரிவாயு சிலிண்டர் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குறைந்த விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும் போது அதிக விலைக்கு வாங்குவது ஏன்? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

News April 28, 2025

பைக் மீது கார் மோதி பெண் உயிரிழப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தேவகி (45), அதே கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவருடன் நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) இரவு பைக்கில் கோவிந்தவாடி சந்தைமேட்டில் இருந்து காஞ்சிபுரம் – அரக்கோணம் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில், தேவகி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விஜய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

News April 28, 2025

மருத்துவ மாணவரிடம் ரூ.11 லட்சம் மோசடி

image

வேலூர், தனியார் மருத்துவ கல்லூரியில் 27 வயது மாணவர் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார். இவரது கைப்பேசி எண்ணுக்கு டெலிகிராம் செயலியில் ஆன்லைன் பகுதி நேரம் மூலம் சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி வந்துள்ளது. அவர்களின் ஆசை வார்த்தையை நம்பி பல தவணைகளாக மொத்தம் ரூ11 லட்சம் முதலீடு செய்துள்ளார். மேலும் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும் என கூறிய போது ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவர் போலீசில் புகார் அளித்தார்.

News April 28, 2025

தீப்பற்றி எரிந்த பள்ளி வகுப்பறை 

image

பட்டீஸ்வரம், கொற்கை பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வகுப்பறைக்குள் இருந்து நேற்று புகை வெளியேறிவுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதில் வகுப்பறைக்குள் இருந்த கல்வி உபகரணங்கள், மேஜைகள், மின் ஒயர்கள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.

News April 28, 2025

முதுகுளத்தூர் அருகே மின்னல் தாக்கி பசு மாடு பலி

image

முதுகுளத்தூர் அருகே உள்ள கிழவனேரி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் பசு மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று திடீரென பெய்த இடியுடன் மழையில், வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பசு மாடு உயிரிழந்தது. நேற்றைய நாளில் 8 ஆடுகளும் மின்னல் தாக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!