India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாராளுமன்ற பொதுத் தேர்தலை (2024) முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக்குழு (MCMC) கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம்,
மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன் உள்ளனர்.
கடலூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட
ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன் ஆகியோர் உள்ளனர்.
திருவண்ணாமலை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தெ. பாஸ்கர பாண்டியன்
100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் அருகே செல்ஃபி எடுத்து நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினார்.
உடன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு பல்லாவரம் சுரபி மகாலில் நடைபெற்ற I N D I A கூட்டணி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் தாமோ அன்பரசன், நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ, க.செல்வம் எம்.பி மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
சேலம் மாநகராட்சியில் நகர நிலவரித் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம் வட்டம், சேலம் மேற்கு மற்றும் தெற்கு ஆகிய வட்டங்களை சார்ந்த நில உரிமையாளர்கள் இணையதளம் வழியாக பட்டாவிற்கு விண்ணபிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி இன்று தெரிவித்துள்ளார். மக்கள் பத்திர பதிவு ஆவணங்களை கொண்டு நகர நிலவரித்திட்ட அலகு 1,2,3 மற்றும் 4ல் தனி வட்டாட்சியர் வழியாக பட்டா பெறலாம் என தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு போலீசார் இன்று அதிரடியாக சாராய வேட்டை நடத்தினார். இதில், 38 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 2540 லிட்டர் பாண்டி சாராயம் 90 மில்லி அளவுள்ள 50 மதுபாட்டில்கள் 180 மில்லி அளவுள்ள 105 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இத்தகவலை போலீஸ் சூப்ரண்ட் இன்று மாலை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, இன்று மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் காமினி மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய தேர்தல் ஆணையர் அவர்கள் நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திண்டுக்கலில் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று இரவு மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் கீழ் கட்சி சுவர் விளம்பரம், மற்றும் விளம்பர பதாகைகளை அகற்றும் பணியை ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.
மதுரை எழுமலையில் இன்று (16.03.2024) ஓபிஎஸ் அணி சார்பில் பாரளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை மற்றும் வாக்குசாவடி குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேடபட்டி ஒன்றிய கழகம் மற்றும் ஏழுமலை பேரூர் கழகம் சார்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமை வகித்தார். முக்கிய நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் தேர்தல் குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அது தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத முகவர்களிடமும் ஒப்படைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.