Tamilnadu

News March 17, 2024

இராமநாதபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-யையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தன. இதன் காரணமாக, ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கிராமப் பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நடைபெறாது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 17, 2024

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவிப்பு

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 1122 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 205 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமான மையங்கள் ஆகவும், 13 வாக்கு சாவடி நிலையங்கள் மிகவும் பதட்டமான மையங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார். மேலும் 5346 அலுவலர்கள் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

தேர்தல் பணி வாகனங்களை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்களுக்கான வாகனங்களை இன்று ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி தொடங்கி வைத்தார். இந்தக் குழுக்கள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளது.

News March 17, 2024

திருச்சி மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் அரக்குழாயில் மண் துகள்கள் மூலம் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை சரி செய்ய 2 மாத காலம் தேவைப்படுவதால் இந்த ஏரியாவை சுற்றியுள்ள 35 நீர் தேக்க மேல்நிலைத் தொட்டிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.

News March 17, 2024

மயிலாடுதுறை புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக எந்நேரமும் 1800-425-8970 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

கடலூர் 22-வது வார்டில் தெருமின் விளக்கு பணி

image

கடலூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தெருமின் விளக்குகள் பராமரிப்பு பணி இன்று நடைபெற்றது. கடலூர் மாநகராட்சி 22-வது வார்டு சொரக்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தெருமின் விளக்குகளில் பராமரிப்பு பணி, இன்று 22-வது வார்டு மாமன்ற சுபாஷினி ராஜா தலைமையில் நடைபெற்றது.

News March 17, 2024

செங்கல்பட்டு: மூதாட்டியிடம் மூன்று லட்சம் திருட்டு

image

தாம்பரம், மீனாம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்வரி(68). இவருக்கு கைப்பேசியில் தொடர்வு கொண்ட மர்மநபர்கள் பிரபல வங்கி அதிகாரிகள் எனக் கூறி, புதிய எ.டி.எம் கார்டு வழங்குவதற்காக  ஓ.டி.பி எண் கேட்டுள்ளனர். ஓ.டி.பி-யை சொன்ன அடுத்த நொடியில் வங்கி கணக்கில் இருந்து 3 லட்சம் பணத்தை திருடியுள்ளனர். இதுகுறித்து நேற்று மூதாட்டி அளித்த புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News March 17, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச்.18 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரையில் நடைபெறாது என பொதுமக்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் , ஆட்சியருமான ஏ.பி மகாபாரதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தம் 

image

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பிரதிவாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டம், கிராம பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் போன்றவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

கரூரில் விற்பனை ஜோர்!

image

கரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கரூரில் கூலிங்கிளாஸ் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைக்காலம் காரணமாக, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது வழக்கம்.ஆனால் நடப்பாண்டு மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே, தமிழகத்தில் கோடையை போல் வெயில் சுட்டெரிக்கிறது.இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப் படுகின்றனர்.

error: Content is protected !!