Tamilnadu

News March 18, 2024

ராமநாதபுரம்: தீவிர வாகன சோதனை…

image

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தலும், ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டை அடுத்து தேர்தல் நடத்தைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

News March 18, 2024

வந்தவாசி அருகே விவசாயி தற்கொலை

image

வந்தவாசி அடுத்த சிங்கப்பள்ளி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலன் விவசாயி. குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் பாலன் வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி நிலையில் கிடந்தார். அவர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலன் இறப்பு குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 18, 2024

கடலூரில் கட்சி கொடி அகற்றினர்

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கடலூரில் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி கம்பம் இருந்து வந்தன.இதனை அவர்களாகவே எடுத்து கொள்ளும்படி கலெக்டர் அருண் தம்புராஜ் வலியுறுத்தினார். இதனை மீறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் அதனை அகற்றி விடும் என்று கூறினார் இந்த நிலையில் கடலூர் பாரதி சாலையில் உள்ள கொடிக்கம்பங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

News March 18, 2024

சேலத்தில் களமிறங்கும் திமுக!

image

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இந்த தேர்தலில், திமுக சார்பில் சேலம் நாடாளுமன்ற தேர்தலில் யார் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

News March 18, 2024

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் விபத்து

image

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று (18.03.2024) திண்டுக்கல் – தாராபுரம் செல்லும் தனியார் பேருந்து வெளிய சென்ற போது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் முழுவதும் சேதமானது. இதையடுத்து அருகே இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தை மீட்டனர். இந்த விபத்தில் காயமின்றி இருசக்கர வாகன ஓட்டுநர் உயிர் தப்பினார்.

News March 18, 2024

விருதுநகர்: விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுநர் மீது வழக்கு

image

தூத்துக்குடி, புதூரை சேர்ந்தவர் நாகவள்ளி(47). நாகவள்ளி தனது மகனுடன் பைக்கில் குலதெய்வம் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தொட்டியாங்குளம் விஷ்வாஸ் பள்ளி அருகே அவ்வழியாக வந்த மற்றொரு பைக் மோதி நாகவள்ளி & அவரது மகன் இருவரும் படுகாயம் அடைந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுநர் மீது திருச்சுழி போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.

News March 18, 2024

திருச்சியில் ஆலோசனைக் கூட்டம்

image

மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் தலைமையில், தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூத் கமிட்டியை வலுப்படுத்துவது, பிரச்சார வியூகங்களை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

News March 18, 2024

ஈரோட்டில் திமுக போட்டி

image

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, ஈரோடு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமுர்த்தி வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள ஈரோடு மக்களவை தேர்தலில் திமுகவே நேரடியாக களமிறங்கவுள்ளது. இந்த முறை ஈரோடு தொகுதியில் பிரகாஷ் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 18, 2024

புதுக்கோட்டையில் நூல் வெளியீட்டு விழா!

image

புதுக்கோட்டையில் நேற்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நகரக் கிளை சார்பில் எழுத்தாளர் சி.பாலையா எழுதிய ‘உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா’ என்ற நூல் வெளியீட்டு விழா மூட்டாம்பட்டி ராஜூ தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி நூலை வெளியிட்டு பேசினார். நானிலம் ஆசிரியர் மணிமொழி உள்ளிட்டோர் நூலை பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக நகரச்செயலாளர் அடைக்கலம் வரவேற்றார்.

News March 18, 2024

நீலகிரி (தனி) தொகுதியில் மீண்டும் திமுக

image

2024 மக்களவை தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக ஆ.ராசா போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.

error: Content is protected !!