India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான புகார்களை 1800 425 8970 , 04364 -211722 என்ற எண்ணிலும், திருவிடைமருதுார் தொகுதிக்கு 0435-240187, கும்பகோணம் தொகுதிக்கு 0435-2430101 , பாபநாசம் 0437-4222456 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தேர்தல் அலுவலர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ‘செல்பி’ பாயிண்ட் நேற்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் நின்று பொதுமக்கள் மற்றும்
சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ‘செல்பி’ எடுத்து செல்கிறார்கள்.
சேலம் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ இக்கூட்டத்தில் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இதில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் பகுதி வாரியாக தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
கம்பம் புதுப்பட்டி பேரூராட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பை உறுதி செய்தல், உறுதிமொழி எடுத்தல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற பணிகளில் மகளிர் திட்ட அலுவலர் தலைமையில் க.புதுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொது மக்களுக்கு துண்டு பிரதிகள் வினியோகம் செய்யப்பட்டது. மக்கள் வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய உறுதிமொழி ஏற்றனர்.
ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டலம் 29ஆவது வார்டு சம்பத்நகர் பகுதியில் குறைந்த வாக்கு சதவிகிதம் உள்ள பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் 100 % வாக்குகள் பெற விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் விழிப்புணர்வு கோலங்கள் வரைந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் மாநகராட்சி செயற்பொறியாளர் மற்றும் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபால சுவாமி பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவினை முன்னிட்டு, விழாவின் முக்கிய நிகழ்வான 7ம்நாள் திருக்கல்யாணம் நேற்று மாலை 6 மணி அளவில் மங்கள வாத்திய முழங்க பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாராளுமன்ற தேர்தல் 2024ஐ – முன்னிட்டு தர்மபுரி தொகுதி முழுவதும் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் சோதனை சாவடி மற்றும் வாக்கு சாவடிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நேற்று இந்தியா கூட்டணி சார்பில் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவாலின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துல்ஜப்பார் , காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முருகேசன், மாநில சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் இப்ராஹிம்பாபு , நகர்மன்ற உறுப்பினர் ராஜாமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பாலா (39), ஜெயபிரதா (38) இவர்களுடைய மகள் ஜெய்மதிபாலா (12) ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார். மார்ச்.22 தினமான நேற்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாணவி ஜெய்மதிபாலா (12) மரகன்றுகளை வழக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை மிதிவண்டியில் சென்று மரகன்றுகளை வழங்கினார்.
கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் தமிழ் எளிமையாகவும், ஆங்கில பாடம் சற்று கடினமாகவும், கணினி அறிவியல் எளிமையாகவும் வேதியல் சற்று கடினமாகவும், இயற்பியல் மிக மிக கடினமாகவும், கணிதம் சற்று கடினமாகவும் உயிரியல் எளிமையாகவும் இருந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர். பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்கள் தங்களது அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Sorry, no posts matched your criteria.