India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கும் , சென்னைக்கும் தனியாக வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் வந்தே பாரத் இயக்க மத்திய ரயில்வே வாரியத்துக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக இன்னும் சில நாட்களில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது.
திருவாரூரில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நாகை மக்களவை வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருவாரூர் மாவட்டத்தில் இன்று ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ் அல்லது அசோக் ரூபி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன?
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் சி.நரசிம்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்பி செல்லக்குமாரே மீண்டும் அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன?
வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளான திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரசும் பாஜகவும் விருதுநகர் உள்ளிட்ட எட்டு தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. சமீபத்தில் பாஜகவில் இணைந்த ராதிகா சரத்குமார்,விருதுநகர் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ் சார்பில் விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே எ.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் உள்ள பாலி பீடரில் நேற்று லாரி மோதி உடைந்த கம்பங்களை இன்று மாற்றும் பணி நடைபெறவுள்ளது. இதனால் இன்று காலை 11 முதல் மதியம் 2 வரை கீழ்க்கண்ட பரிந்தல், கொட்டையூர், நின்னையூர், நெடுமானூர், பூ மலையனூர், புத்தமங்கலம், சிறுவத்தூர், ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் ஏற்படும் என அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று (மார்ச்.23) காலை 10 மணி வரை குமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
2017ல் திசையன்விளை பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தேவபாலன் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் அவரது மகன்கள் சேர்ம துரை, சுரேஷ் ஆகியோர் டிரைவர் தேவபாலனை அப்பகுதியில் உள்ள அம்மன் கோயில் ஓடையில் நேற்று (மார்ச் 22) கொடூரமாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். திசையன்விளை போலீசார் விசாரிக்கின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் காஞ்சிபுரம் தொகுதியில் மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், காஞ்சிபுரம் தொகுதிக்கு பா.ம.க. சார்பில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலுப்பூர் மேலப்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகளுக்கு நேற்று மேலப்பட்டி அம்மன் கோவில் அருகே உள்ள சமுதாய கூடத்தில் காதணி விழா நடத்தியுள்ளார். இதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ராமர், சூர்யா, முத்துசெல்வி, பாண்டியம்மாள் ஆகிய 4 பேரும் மொய் எழுதுபவரை திசை திருப்பி பணத்தை கையாடல் செய்தனர்.இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Sorry, no posts matched your criteria.