India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் சோதனை சாவடியில்
குமாரலிங்கம் (28) என்பவர் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச். 22)பறிமுதல் செய்தனர். அதனை செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அல்லிநகரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டியம்மாள் சக போலீசாருடன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது ஜெயம் நகர் பின்புறம் கருப்பசாமி கோயில் அருகே கூட்டமாக சிலர் அமர்ந்திருந்தனர். போலீசார் அருகில் சென்று பார்த்தபோது அவர்கள் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.அவர்களை சுற்றி வளைத்த போலீசார் சின்னசாமி, ராஜா, ராஜேஷ், கணேசன், அறிவழகன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்ட எல்லை பகுதியான கண்ணமங்கலம் சிசி ரோடு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை முதல் ஆரணி தேர்தல் பறக்கும் படை அலுவலர் மோகன் தலைமையில் சரவணன் பிரதாப் மற்றும் ராஜேஸ்வரி உள்ளிட்ட பறக்கும் படை அதிகாரிகள், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் பலத்த சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிட உள்ளார். அதனை தொடர்ந்து அவர் இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளித்த தேசிய தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகர காவல் துறை பொதுமக்களின் நலன் கருதி இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில், சந்தேகத்திற்குரிய போலியான இணைப்புகள் மூலம் வரும் லிங்குகளில் இருந்து ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறப்பட்டுள்ளது. மேலும் இது இணையத்தில் மோசடி செய்பவர்கள் மூலம் உங்கள் எஸ் எம் எஸ் மற்றும் கேமரா போன்ற தொடர்புகளை அணுகி நிதி இழப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை மணலி சாலையில் 18வது மக்களவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது கட்சிக் கொடியுடன் வந்த வாகனத்தை நிறுத்தி கொடியை அகற்ற அறிவுறுத்தினர். மேலும் அனைத்து வாகனங்களையும் கண்காணிப்புடன் சோதனை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாராப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஆலங்காயம் ஒன்றியம் வெள்ளக்குட்டை ஊராட்சி பகுதியை சேர்ந்த ரத்தினம் (67) விவசாயி பைக் மீது மற்றொரு பைக் மோதியதில் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று(மார்ச்.21) இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில்
500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம் அதேபோல் நேற்று முன்தினம் வழக்கம் போல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு நேற்று கரைத்திரும்பினர் . அப்போது கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் வலையில் 2,500 கிலோ காலா மீன்கள் சிக்கியிருந்தது.
கோடை காலம் ஆரம்பித்துள்ளதால், விருதுநகர் மாவட்டத்தில் வெப்பக்காற்று தாக்கத்தால் பொதுமக்கள் பாதிப்படையாமல் இருக்கும் பொருட்டு பல்வேறு அறிவுரைகளை ஆட்சியர் ஜெயசீலன் வழங்கியுள்ளார். லேசான இளம்வண்ண தளர்வான பருத்தி ஆடைகளை அணிதல், சூரிய ஒளியில் வெளியில் செல்லும் பொழுது பாதுகாப்பிற்கான கண்ணாடி, குடை, தொப்பி, காலணிகள் அணிதல், அதிகளவில் தண்ணீர் குடித்தல் போன்றவற்றை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளார்.
மக்களவை தேர்தலில் அலுவலகப் பணி காரணமாக அரசு அங்கீகார அட்டை மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, பஸ் பயண அட்டை வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள், ஆசிரியர், செய்தியாளர், புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோர் தேர்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலை உள்ளது. இவர்கள் அஞ்சல் மூலமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பிஆர்ஓ அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.