India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக வழக்கறிஞர் கே.பாலு அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு, புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆரணி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளராக கணேஷ்குமார் சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் பா.ஜ.க கூட்டணி சார்பில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பா.ம.க சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக அரசாங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு, புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக திலகபாமா சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் பா.ஜ.க கூட்டணி சார்பில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பா.ம.க சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக இயக்குனர் தங்கர் பச்சன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக முரளி சங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்துக்குட்பட்ட விவேகானந்தர் காலனியில் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மாதங்களாக சாலை சேதமடைந்த நிலையில் உள்ளதால் விபத்து ஏற்பட்டு வருவதால் சாலையை சீரமைக்க கோரி ஏற்கனவே மனு அளித்தும் சாலை சீரமைக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று மாலை செங்கமலநாச்சியார்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
குமரி, அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சூரிய ரேஸ்மி. இவர், நேற்று பணியில் இருந்தபோது அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த வியாபாரி அருள்ராஜன்(45) என்பவர் மதுபோதையில் வந்து, சூரிய ரேஸ்மியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்ராஜனை கைது செய்தனர்.
ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்யா. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து இருந்து வந்த நிலையில், நேற்று மேலநெம்மக்கோட்டையில்
உள்ள கிணற்றில் சத்யா குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சத்தியாவை உயிருடன் மீட்டனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை
தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட போலீசார், மதன், கௌதம், சரண், பிரேம்குமார், லோகேஷ், கார்த்திக் உட்பட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.