India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி, சூளகிரி தீர்த்தம் சாலையில் மது விலக்கு காவல் ஆய்வாளர் ஷர்மிளா பானு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி நோக்கி வேகமாக வந்த காரை சோதனை செய்தனர். அதில் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட கர்நாடக மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு திருப்பத்தூரை சேர்ந்த ஓட்டுநர் வீரமணி என்பவரை கைதுசெய்து அவரிடமிருந்து 1400 மதுபாட்டில் நேற்று பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக சேவியர் தாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
செஞ்சி தலவாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (26). இவர் வானூர் தாலுகா அலுவலகத்தில் லைசென்ஸ் சர்வேயராக பணியாற்றிவந்தார். நேற்று இரவு வானூர்-திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சாலையில் ஆகாசம்பட்டு பகுதியில் பைக்கில் சென்றபொழுது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். ஜிப்மரில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து வானூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
திருச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு
தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.
நெல்லை, கன்னியாகுமரி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 25ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக நாங்குநேரி டோல்கேட் அருகில் பிரமாண்டமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று (மார்ச் 20) மாலை ஆய்வு செய்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக பாபு அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல், சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி போட்டியிடவுள்ளார். இவர், 1991இல் நாமக்கல் எம்எல்ஏ-வாகவும், 1991 – 1996 ஆண்டுகளில் உள்ளூராட்சி அமைச்சராகவும் இருந்துள்ளார். 1999 மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2008இல் அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தார். திமுக-வின் 11 புதிய வேட்பாளர்களில் இவரும் ஒருவர்.
விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் மற்றும் செஞ்சி சட்டமன்ற தொகுதியின் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 20) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு, தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்வது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே இருந்த அன்பு சுவர் நேற்று முன்தினம் நீக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அன்பு சுவர் நீக்கப்படவில்லை, மாறாக நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே செயல்பட்டு வருகின்றது .மேலும் சில இடங்களில் அன்பு சுவர் அமைக்கப்படும் பணி தேர்தலுக்குப் பின் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.