Tamilnadu

News March 20, 2024

புதுக்கோட்டை அருகே பெண்ணின் விபரீத செயல்

image

இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை. அரிமளம் ஒன்றியம் இரும்பாடி காந்தி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரவினா(23). இன்னும் திருமணமாகவில்லை. இதனால் மனவேதனையடைந்த பிரவினா வீட்டில் பேனில் தூக்குமாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏம்பல் எஸ்.ஐ.மனோகர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

News March 20, 2024

சிதம்பரம் மக்களவைத் தொகுதி வாக்காளர்கள் விபரம்

image

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அளித்த ஓட்டு சதவீதம் பற்றி விவரம்: குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றாகிய வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண் வாக்காளர்கள் 7,49,623 பெண் வாக்காளர்கள் 7,61,206 மூன்றாம் பாலினத்தவர்கள் 86 என மொத்த வாக்காளர்கள் 15,10,915 தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்

News March 20, 2024

வேலூர் மாவட்டம் முழுவதும் 519 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் 732 துப்பாக்கிகள் உரிமம் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இதில் 519 துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 212 துப்பாக்கிகள் வங்கி பயன்பாட்டிற்காக சான்று வழங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு துப்பாக்கி இன்னும் ஒப்படைக்கப்பட வேண்டியுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News March 20, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றும் விதமாகவும் தேர்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோலப்போட்டி நடைபெற்றது. அதனை தொடர்ந்து அரசு அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணைய உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

News March 20, 2024

கிருஷ்ணகிரி காங்கிரஸ் சார்பில் வேட்பு மனு தாக்கல்

image

கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் டாக்டர் செல்லக்குமார் போட்டியிட வேண்டி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

News March 20, 2024

செங்கத்தில் களை இழந்த காணப்பட்ட புதன் சந்தை

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை சந்தை கூடுவது வழக்கம். இதில் ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் ஆகியவற்றை வியாபாரிகள், பொதுமக்கள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். ரூ.50,000 மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இன்று புதன் சந்தையில் கூட்டம் வழக்கத்தை விட மிகக் குறைவாகவே இருந்தது .

News March 20, 2024

ரூ.2 லட்சம் மதிப்புள்ள மது பாக்கெட்டுகள் பறிமுதல்

image

ஜோலார்பேட்டை போலிசார் இன்று(மார்ச்.20) அதிகாலை மாக்கனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான வெளி மாநில மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையெடுத்து போலீசார் காரை பறிமுதல் செய்து முனியப்பன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 20, 2024

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: திமுக தேர்தல் அறிக்கை

image

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் குறிப்பாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

News March 20, 2024

திருச்சியில் வினோத முறையில் வேட்புமனு தாக்கல் 

image

திருச்சி நாடாளுமன்றத்தில் போட்டியிட ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் ராஜேந்திரன் என்பவர் தேர்தல் அலுவலரான ஆட்சியர் பிரதீப்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.டிஜிட்டல் இந்தியாவில் வேட்பாளர்கள் பணம் செலுத்த டிஜிட்டல் முறையை நடைமுறைபடுத்த வேண்டுமெனக் கூறி ஆதார் &வாக்காளர் அட்டை,ஓட்டுனர் உரிமம்,ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை தனது கழுத்தில் மாலையாக அணிந்து வந்து வினோத முறையில் வேட்புமனு தாக்கல் செய்தார்

News March 20, 2024

நெல்லை: மார்ச் 21 இஎஸ்ஐ, பிஎஃப் குறைதீர் கூட்டம்

image

மார்ச் மாதத்திற்கான வருங்கால வைப்பு நிதி பணியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது நெல்லை மாவட்டத்திற்கான கூட்டம் வீரவநல்லூர், காந்திநகர் ஹரிகேசவநல்லூர் சாலையில் உள்ள அம்பாசமுத்திரம் சர்வோதயா சங்கத்தில் காலை 9 மணிமுதல் நடைபெறும். பிஎஃப், இஎஸ்ஐ சார்ந்த உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!