India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தடைசெய்யப்பட்ட பொருட்களை அனுப்பியதாகக் கூறி தாம்பரத்தைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ. 1.24 கோடியை மோசடி செய்த ஒடிசாவைச் சேர்ந்த தாவத் பிரவீன்குமார் (28), ஆகாஷ் மோகன்டி (26) ஆகிய இருவரைச் சென்னை சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்கள் இருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்வதாக மிரட்டி பணத்தைப் பறித்துள்ளனர். இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் மக்களே நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த<
புதுச்சேரியில் சமீப காலங்களாக கோஷ்டி மோதலால் கொலைகள் அதிகரித்து வருகிறது. அதேபோன்று இன்று புதுச்சேரி சண்முகா திரையரங்கம் எதிரே பெரியார் நகரைச் சேர்ந்த லூர்து என்னும் வாலிபரை மர்ம நபர்கள் கொலை செய்யும் நோக்குடன் தாக்கியுள்ளனர், பாதிக்கப்பட்ட நபர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை சார்பில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு செப் 20, 27 மற்றும் அக் 4, 11 ஆகிய தேதிகளில் வைணவ கோவில்களுக்கு இலவசமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 60 முதல் 70 வயதுக்குட்பட்ட இந்துமதத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் நாகை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் சாமியப்பா நகர் பகுதியை சேர்ந்த உமர் பாஷாவின் வீட்டில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெள்ளி நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வேப்பந்தட்டை பாலையூர் பகுதியை சேர்ந்த நவீன் குமார் (25), திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (27) ஆகியோரை கைது செய்தனர்.
செப்.,28ம் தேதி நடக்கவிருக்கும் குரூப் 2 போட்டித் தேர்வை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா இலவச வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வாரம், திங்கள்–பொருளியல், செவ்வாய்–கணக்கு, புதன்–விடுமுறை, வியாழன்–unit 6, வெள்ளி–வரலாறு ஆகிய வகுப்புகள் நடைபெறவுள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விருத்தாசலம் சாலையில் உள்ள, அரசு மயான புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க வேண்டும் என்று, ஜெயங்கொண்டம் சுன்னத் ஜமாத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக டிஎஸ்பி ரகுபதி மற்றும் தாசில்தார் சம்பத் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இராணிப்பேட்டை மக்களே நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <
கள்ளக்குறிச்சி மக்களே நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <
தூத்துக்குடி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்பதை போட்டோவுடன் <
Sorry, no posts matched your criteria.