Tamilnadu

News March 23, 2024

கஞ்சி குடிக்கும்போது பல் செட்டை விழுங்கிய மூதாட்டி

image

சென்னையில் நோன்பு கஞ்சி குடிக்கும்போது பல் செட்டையும் சேர்த்து மூதாட்டி ஒருவர் விழுங்கியுள்ளார். உடனே மூதாட்டியின் உறவினர்கள் அருகிலுள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர். நேற்று மூதாட்டிக்கு அறுவைச் சிகிச்சை செய்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பல் செட்டை வெளியே எடுத்து உயிரை காப்பாற்றியுள்ளனர் .

News March 23, 2024

ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள எச்சரிக்கை

image

போடி- மதுரை ரயில்பாதை சில மாதங்களுக்கு முன்பு, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு போடி-மதுரை விரைவு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போடி-மதுரை ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டு 25 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இருப்புப்பாதையை மிக கவனமாக, கடந்து செல்ல தென்னக ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் இன்று அறிவுறுத்தியுள்ளது.

News March 23, 2024

பெண் பணியாளா்களுக்கு விலக்கு

image

சத்தியமங்கலத்தில் குன்றி கடம்பூா், குத்தியாலத்தூா், தாளவாடி மற்றும் பா்கூா் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேர்தலுக்கு முந்தையநாள் அங்கு பெண்கள் தங்கவேண்டிய சூழல் இருப்பதால் அப்பகுதியில் பெண்கள் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பெண்களுக்கு மாற்றாக ஆண்களை அங்கு பணியமா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

News March 23, 2024

ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

image

திருச்சி மாவட்டம் கல்லக்குடி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஒரு முறை பயணம் செய்ய, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

image

திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஒரு முறை பயணம் செய்ய, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

image

அரியலூர் மாவட்டம் மணகெதி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஒரு முறை பயணம் செய்ய, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

விழுப்புரம்: ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

image

விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது. ஒரு முறை பயணம் செய்வது, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் 5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

வேலூர்: ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

image

வேலூர் மாவட்டம் கணியம்பாடி (வல்லம்) சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது. ஒரு முறை பயணம் செய்வது, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் 5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.இதனால்,மோப்பநாயின் உதவியுடன் ரயில் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் தீவீர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

News March 23, 2024

வேலூர்: பாஜக வேட்பாளருக்கு ரஜினி வாய்ஸ் தருவாரா?

image

மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் வேலூர் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம் களம் இறங்கியுள்ளார். இவருக்கு ஆதரவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், ஏ.சி.சண்முகம்-ரஜினிகாந்த் இடையேயான நட்பு, ஆன்மிக ரீதியிலான கருத்தொற்றுமை, பிணைப்பு அலாதியானது என்கின்றனர் அவர்களைப் பற்றி விவரமறிந்தவர்கள்.

error: Content is protected !!