Tamilnadu

News March 22, 2024

தேர்தல் பணியில் 12,000 பேர்: கலெக்டர் தகவல்

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவு, தேர்தல் பணி அலுவலர்கள் பணியாளர்கள் பணியிடம் கணினி மூலம் தேர்வுசெய்து ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் 1,374 வாக்குப்பதிவு மையங்களில் ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என 12,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர் என தெரிவித்தார்.

News March 22, 2024

கனவுகளுக்கு கைக்கொடுக்கும் பியூட்டி பயிற்சி

image

திண்டுக்கல் மாவட்டம் பாண்டியன் நகர் காட்டாஸ்பத்திரி அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் இலவச திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சியின் கீழ் செயல்படும்( ASA SKILL PLUS) இலவச அழகு கலை பயிற்சிக்கு இன்று (மார்ச்.22) முதல் அட்மிஷன் நடைபெறுகிறது. இதன் பயிற்சி காலம் 4 மாதங்கள். பயிற்சி முடித்தவுடன் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். ஆர்வமுள்ள பெண்கள் இதில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2024

கிருஷ்ணகிரி: நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை

image

மத்திகிரி தின்னூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் சுமித்ரா (25) ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில் சுமித்ரா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால் பல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமாகவில்லை, இதனால் மனமுடைந்த சுமித்ரா சம்பவம் அன்று தின்னூர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 22, 2024

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய கூட்டணி கட்சி சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மீண்டும் வைத்தியலிங்கம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது எம்.பியாக உள்ளார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 22, 2024

செங்கல்பட்டு அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்

image

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் சோதனை சாவடியில்
குமாரலிங்கம் (28) என்பவர் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச். 22)பறிமுதல் செய்தனர். அதனை செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News March 22, 2024

தேனியில் ஐந்து பேர் கைது

image

அல்லிநகரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டியம்மாள் சக போலீசாருடன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது ஜெயம் நகர் பின்புறம் கருப்பசாமி கோயில் அருகே கூட்டமாக சிலர் அமர்ந்திருந்தனர். போலீசார் அருகில் சென்று பார்த்தபோது அவர்கள் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.அவர்களை சுற்றி வளைத்த போலீசார் சின்னசாமி, ராஜா, ராஜேஷ், கணேசன், அறிவழகன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

News March 22, 2024

திருவண்ணாமலை அருகே தீவீர சோதனை

image

திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்ட எல்லை பகுதியான கண்ணமங்கலம் சிசி ரோடு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை முதல் ஆரணி தேர்தல் பறக்கும் படை அலுவலர் மோகன் தலைமையில் சரவணன் பிரதாப் மற்றும் ராஜேஸ்வரி உள்ளிட்ட பறக்கும் படை அதிகாரிகள், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் பலத்த சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

News March 22, 2024

தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிட உள்ளார். அதனை தொடர்ந்து அவர் இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளித்த தேசிய தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

News March 22, 2024

திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாநகர காவல் துறை பொதுமக்களின் நலன் கருதி இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில், சந்தேகத்திற்குரிய போலியான இணைப்புகள் மூலம் வரும் லிங்குகளில் இருந்து ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறப்பட்டுள்ளது. மேலும் இது இணையத்தில் மோசடி செய்பவர்கள் மூலம் உங்கள் எஸ் எம் எஸ் மற்றும் கேமரா போன்ற தொடர்புகளை அணுகி நிதி இழப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.

News March 22, 2024

கட்சிக் கொடிகளை அகற்றிய தேர்தல் அதிகாரிகள்

image

சென்னை கொருக்குப்பேட்டை மணலி சாலையில் 18வது மக்களவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது கட்சிக் கொடியுடன் வந்த வாகனத்தை நிறுத்தி கொடியை அகற்ற அறிவுறுத்தினர். மேலும் அனைத்து வாகனங்களையும் கண்காணிப்புடன் சோதனை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!