India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் அதிமுக ஐடி விங் மாநில தலைவர் சிங்கை இராமச்சந்திரன், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இங்கு அதிமுக, திமுக, பாஜக நேரடியாக மோதுவதால் கோவை ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. உங்கள் கருத்து என்ன மக்களே?
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்,தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுயது:திருச்சியில் 2547 வாக்குச்சாவடி மையம் உள்ளது.3053 வாக்குப்பதிவு இயந்திரம்,3053 கட்டுப்பாட்டு கருவிகள்,3037 விவிபேட் உள்ளன.மண்டல அலுவலர்களுக்கு நாளை பயிற்சி வழங்கப்படுகிறது. திருச்சியில் நேற்று மாலை வரை ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இன்று காலை ரூ15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையொட்டி அவருக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என அக்கட்சியின் செயல் தலைவர் ரவிக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட கட்டிட உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெகதீசன் தலைமையில் 20 இளைஞர்கள் மாற்று கட்சியிலிருந்து விலகி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுக கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூர் (தனி) எம்பி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எம்பி தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 10 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் சார்பில் இன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
நீலகிரி எம்பி தொகுதியின் பாஜக வேட்பாளர் பயோ டேட்டா இன்று (மார்ச் 22) அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர்: எல்.முருகன், முகவரி-353, குருஜி, 1வது குறுக்கு தெரு, அண்ணா நகர், சென்னை. பெற்றோர்: லோகநாதன், வருடம்மாள், பிறந்த தேதி: 29.05.1977, கல்வி தகுதி: MLM, மனைவி: கலையரசி, டாக்டர், மகன்கள்: தர்னேஷ், இந்திரஜித், தொழில்: வக்கீல், அரசியல்வாதி, அரசு பதவி: ராஜ்யசபா எம்பி (மபி) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 18வது மக்களவை தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி பெரம்பலூர் மக்களவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியதில் இருந்து, நேற்று(மார்ச் 21) வரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் கடந்த 2 நாட்களில் 23 பேர் வேட்பு மனு வாங்கி சென்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், வரும் நாட்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என நேற்று(மார்ச் 21) ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் சரகத்தில், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றும் வகையில் வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2 மாதத்தில் மட்டும் போதையில் வாகனம் ஓட்டிய 27 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 49 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மாதத்தின் 4ஆம் சனிக்கிழமை நாளை (23.03.2024) (ம) நாளை மறுநாள் (24.03.2024) ஆகிய 2 தினங்களில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறாது என மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சங்கீதா இன்று (21.03.2024) அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.