Tamilnadu

News March 17, 2024

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையால் புதிதாக அலைபேசி எண் (8525852636) அறிமுகப்படுத்தப்பட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்களோ அல்லது சம்மந்தப்பட்ட நபர்களோ உண்மைக்கு புறம்பான செய்தியின் மீது நடவடிக்கை எடுக்க மேற்கண்ட அலைபேசி எண்ணில் புகார் அளிக்க காவல்துறை சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News March 17, 2024

திருப்பூரில் விவசாயிகள் சார்பில் பேரணி

image

திருப்பூர்,பல்லடம் சாலை லட்சுமி திருமண மண்டபத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை பேரணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைகளில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் நிலக்கடலை எண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

News March 17, 2024

காஞ்சி: குழப்பத்தில் தேர்தல் பறக்கும் படை 

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் அண்ணா பேருந்து நிலையம் எதிரில் இன்று மாலை 5 மணிக்கு தமிழர் விடுதலைக் கட்சியின் சார்பில் மக்களுக்காக அரசா? மாபெரும் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு பொதுக்கூட்டம் நடத்தி வருவது பெரும் குழப்பத்தில் தேர்தல் அதிகாரிகள் உள்ளனர். இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

News March 17, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் C-VIGIL என்ற தொலைபேசி செயலி மூலம் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என தெரிவித்தார்.

News March 17, 2024

திருச்சியில் அதிரடி சோதனை

image

திருச்சி மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும் , அரசியல் கட்சிகள் பரிசு பொருட்களை தடுக்கவும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் இந்நிலையில் திருச்சி குடமுருட்டி சோதனை சாவடியில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன ஓட்டிகளிடம் வாகனங்களில் முன்புறமுள்ள கட்சி கொடிகளை அகற்ற அறிவுறுத்தினர்.

News March 17, 2024

ஈரோடு மக்களவை தொகுதியில் 15 இலட்சம் வாக்காளா்கள்

image

ஈரோடு மக்களவை தொகுதியில் மொத்தம் 15,28,426 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஈரோடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 2,55,717 பேர், ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2,30,470 பேர், ஈரோடு மேற்கு தொகுதியில் 2,95,773 பேர், மொடக்குறிச்சி தொகுதியில் 2,27,966 பேர், தாராபுரம் தொகுதியில் 2,58,819 பேர், காங்கயம் தொகுதியில் 2,59,681 பேர் என மொத்தம் 15,28,426 வாக்காளா்கள் உள்ளனா்.

News March 17, 2024

நாட்டுதுப்பாக்கி மற்றும் கரி மருந்து பறிமுதல்  

image

வேலூர், பேரணாம்பட்டு மொரசப்பள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த பிச்சாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் கரி மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்த பேரணாம்பட்டு வனத்துறையினர் பிச்சாண்டியை பேரணாம்பட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 17, 2024

உடுமலை :30 ஆயிரம் மதிப்பிலான பொன்னாடைகள் பறிமுதல்

image

திருப்பூர், உடுமலையில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தணிக்கை குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடுமலை வழியாக வந்து கொண்டிருந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள்
இல்லாமல் கொண்டு வந்த
30 ஆயிரம் மதிப்புள்ள 158 பொன்னாடைகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொன்னாடைகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவறையில் வட்டாட்சியர் சுந்தரம் முன்னிலையில் வைக்கப்பட்டன.

News March 17, 2024

கண்டா வர சொல்லுங்க போஸ்டரால் பரபரப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டை அடுத்த பாவக்கல் பகுதியில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமாரை கண்டா வரச் சொல்லுங்க என போஸ்டர் ஒட்டியதால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இது போன்ற போஸ்டர்களை கிராமப் பகுதியில் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 17, 2024

சிவகங்கை: வீர விதை சிலம்பம் மாணவருக்கு விருது 

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வீர விதை சிலம்பாட்ட குழுவின் மாணவர் சிவாவிற்கு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மூலம் சிறந்த கலைஞருக்கான விருதை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கலை இளம் மணி வளர்மணி சுடர்மணி நன்மணி முதுமணி விருதுகள் வழங்கப்பட்டன. வீரம் விதை சிலம்பாட்ட குழுவின் மாஸ்டர் கலை வளர்மணி டாக்டர் பெருமாளை பெற்றோர்கள் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!