India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதை வலியுறுத்தி இன்று(16.03.2024) விழிப்புணர்வு எடுத்துக்கொண்டனர். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கலைச்செல்வி மோகன் தலைமையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சேலம் மாவட்டம் இடங்கண சாலை நகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஒரு மாதமாக காவிரி குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த மக்கள் இன்று இளம்பிள்ளை – சின்னப்பம்பட்டி பகுதியான பாப்பாபட்டி பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் A.A.ஆறுமுகம் இன்று (16.03.2024) வழங்கினார். இந்நிகழ்வில், பள்ளித் தலைமை ஆசிரியை பா.ஜெயக்குமாரி, உதவி தலைமை ஆசிரியர் மு. சண்முகம் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூரில் கடந்த சில நாட்களாக காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதேபோல் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வரத்து குறைந்ததுதான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடலூரில் கடந்த மாதம் ரூ.52-க்கு விற்ற ஒரு கிலோ பொன்னி புழுங்கல் தற்போது 60-க்கு விற்கப்படுகிறது.
திருச்சி தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தில் மே 5 ஆம் தேதி மண்டல அளவிலான அஞ்சல் சேவை குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க, கோட்ட அளவில் ஏற்கனவே கிடைத்த பதிலில் திருப்தியடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பி வைக்கலாம் என மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர்
நிர்மலாதேவி நேற்று அறிவித்துள்ளார்…
மன்னராட்சிக் காலத்தில் நகரமைப்புக்குப் பெயா்போன நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சி ஏறத்தாழ முழுமையாகப் பாழ்பட்டுப் போயிருக்கும் சூழலில்,மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட அறிவிப்பு மக்களிடம் ஏராளமான எதிா்பாா்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.திட்டத்தை விரிவாக்க ரூ. 90 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.நகர விரிவாக்கத்துக்குப் பிறகு பெருந்தொகையுடன் சிறப்புத் திட்டம் தேவை.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள் தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மண்டபங்களை வாடகைக்கு விடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது. அரசியல் கட்சிகள் தங்குவதற்கும் அனுமதிக்க கூடாது என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திர எச்சரித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்கள் இன்று 16.02.2024- தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். உடன் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட மருந்துகள் கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனையில் பெண்களுக்கான நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகின்ற 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் சிறுநீர் சம்பந்தமான ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் திருச்சியைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற மருத்துவமனை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.