India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 6 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று ஏற்கப்பட்டது. மேலும், வரும் 30 ஆம் தேதி வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் எனவும், 9 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது எனவும் புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி வேட்பாளர் கந்தனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் சுயேட்சை என்றும் சில இடங்களில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்றும் குறிப்பிட்டிருந்ததாக, நாதக வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் தொட்டியம் சாலையில் சுருட்ட பாளையம் பேருந்து நிலையம் அருகே இன்று டூவீலர், கார் மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை சிந்தாமணி சாலை ராஜம்மா நகரில் விஜயலட்சுமி அரிசி ஆலையை சௌந்தர குமார் (50) என்பவர் நடத்தி வருகிறார். இன்று அரிசி ஆலையில் இருந்த போது மர்ம கும்பல் சௌந்தர குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆலைக்கு அருகே கருவேலமரம் வெட்டுவதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
பூதலூர் அருகே குணமங்கலத்தை சேர்ந்தவர் சுதீஷ் (25). இவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த கிரி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கிரி, ஜீவா, குணால், குமார் ஆகியோர் சுதீஷ் வீட்டிற்கு சென்று, அவரிடம் தகராறு செய்து சரமாரியா தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுதீஷ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குணாலை போலீசார் கைது செய்தனர்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை இன்று (மார்ச் 28) கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நடிகர் மன்சூர் அலிகான் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். அப்போது மன்சூர் அலிகான் “தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் (திமுக) நீங்கள் தான் வெற்றி பெறப் போகிறீர்கள் ஆனால் வேலூரில் நான் வெற்றி பெறுவேன்” என கூறி வாழ்த்தினார்.
ஓசூர்:கெலமங்கலம் அடுத்த சின்னட்டியை சேர்ந்தவர் முருகேசன்(48). இவர் நேற்று முன்தினம் இரவு, கர்நாடகம், அத்திப்பள்ளிக்கு பைக்கில் சென்றார். அப்போது குந்துமாரனப்பள்ளி அருகே தரைமட்ட பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று காலை கெலமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டனர். அவரது சாவிற்கு காரணம், அலட்சியமான சாலை பணிதான் என உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவர் பிரபல தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சிவகுமார் சங்கராபுரத்தை சேர்ந்த பழனிகுமார் வீட்டிற்கு சென்று வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த வலியுறுத்தியுள்ளார். அப்போது, பழனி குமார், அவரது மகன் ஷியாம் ஆகியோர் சேர்ந்து இவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் அடுத்த வழிசோதனைபாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் நேற்று மாலை கடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அவரது தாய் மற்றும் பாட்டியுடன் பைக்கில் சென்றார். அப்போது புஷ்பராஜ் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இதனால், மூவரும் நிலைகுலைந்து பைக்குடன் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வேட்பாளராக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று வேட்பாளர் விரும்பி கேட்ட சின்னமான டம்ளர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.