India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை கே.புதூரில் மதுரை நாடாளுமன்ற நாதக வேட்பாளர் சத்யாதேவிக்கு ஆதரவாக சீமான் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் ஆற்றிய உரையில் கச்சத்தீவை 10 ஆண்டுகளாக மீட்காமல் தற்போது அண்ணாமலை கச்சத்தீவு குறித்து பேசி வருகிறார். தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல் அண்ணாமலை எனக்காக. பேசி வருகிறார். உண்மையில் பாஜக அண்ணாமலைதான் எனக்கு. சிலிப்பர் செல் என பேசினார்.
கீழ்குந்தா பகுதியில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பாஜகவினர் அவருக்கு படகர் கலாச்சார பாரம்பரிய முறைபடி சால்வை, தலைப்பாகை அணிவித்து வரவேற்றனர். அதே உடை அணிந்த வேட்பாளர் எல்.முருகன் ஊர்வலம் சென்று பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார். நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மோகன் ராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. அருகே உள்ள கேரளாவிலும் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் இங்கும் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 99.5 டிகிரி பதிவானது. இதனால் பகல் நேரத்தில் இருசக்கர வாகனங்களிலும் நடந்து சென்றவர்கள் சிரமப்பட்டனர்.
மாமல்லபுரத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று மாமல்லபுரம் கடற்கரை மற்றும் வெண்ணெய் உருண்டைக் கல் அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.கே. விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து, திராவிட முன்னேற்றக் கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கடலூரில் வரும் 6-ஆம் தேதி சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நேற்று வெளியானது. இதில் சுயேட்சை வேட்பாளரான விஜயராகவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே நாகை சட்டமன்ற தேர்தலில் விசிக சார்பில் ஆளூர் ஷாநவாஸ் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது திமுக தலைமையிலான கூட்டணியில் சிபிஐ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வாக்குகள் சிதறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
குஷ்புவுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்து பெண் ஒருவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தை ஆதரித்து கோபாலபுரத்தில் நடிகை குஷ்பு வாக்கு சேகரித்தார். அப்போது பால்கனியில் நின்ற பெண் ஒருவர் குஷ்புவை பார்த்து கை காட்டினார். பதிலுக்கு குஷ்புவும் கையசைத்தார். இதனால் உற்சாகமான அந்த பெண் அவருக்கு பறக்கும் முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்று தரப்படும், மின்துறை தனியார்மயமாக்கப்படாது, ரேஷன் கடைகள் திறக்கப்படும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு உள்ளூர் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
புதுச்சேரி வசந்தம் நகரில் இன்று வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் காயமடைந்த மூன்று தொழிலாளர்கள் புதுச்சேரி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை புதுச்சேரி ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தனது கட்சியினருடன் புதுச்சேரி ஜீவா நகர் பகுதியில் திறந்த வாகனத்தில் இன்று மதியம் பிரச்சாரம் செய்தார். அப்போது வைத்திலிங்கம் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதட்டமான சூழல் உருவானது. இதையடுத்து மற்ற நிர்வாகிகள் வைத்திலிங்கத்தை மீட்டு அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றனர். 15 நிமிடம் ஓய்வெடுத்த வைத்திலிங்கம் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
Sorry, no posts matched your criteria.