India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்று (ஏப்ரல் 2) தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர இருப்பதால் வேலூர் மாநகராட்சி பகுதிகள் முழுவதையும் “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” (No Flying Zone) பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்.19 இல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இது 10 நாட்காளுக்குள் வாக்காளர்களுக்கு நேரடியாக வீடு தேடி வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் அடுத்த விழுதமங்கலம் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து 9 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று கே.நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்த நவீன்(25), வெங்கடேசன்(28) ஆகிய இருவரை கைது செய்து அவா்களிடமிருந்து 6 சவரன் தங்க நகைகளையும், 500 கிராம் வெள்ளி பொருள்களை மீட்டனர்.
பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் நேற்று (ஏப்.1) ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வடுகபட்டி பகவதி அம்மன் கோவில் தெருவில் நின்று கொண்டிருந்த ராஜ்குமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 102.74 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாடத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) பரமத்தியில் வெப்ப அளவு 104.36 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்ற இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் புளியமரம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு அப்பகுதி மக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) வெப்ப அளவு 101.12 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்று குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் ஸ்டீபன் (25). இவரும், பிரவீன் பால்ராஜ் (25) என்பவரும் நேற்று முன்தினம் டூவீலரில் சென்றபோது தேன்கனிக்கோட்டை பகுதியில் அவ்வழியாக சஞ்சய் (22) என்பவர் ஓட்டிவந்த டூவீலர் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சஞ்சய் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்தார். பிரவீன் பால்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட பாஜக அணி/பிரிவு மையக்குழு கூட்டமானது மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நேற்று (ஏப்ரல் 1) மாலை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க ஏப்ரல் 5ஆம் தேதி தக்கலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.